Advice for Effortless Meditation London (England)

வாழ்க்கையில் … அதுபோலவே நுண்ணதிர்வுகள் பாய்ந்து கதிர்வீச்சாகப் பரவுகின்றன. நீங்கள் செய்யவேண்டியது, அதன் தாக்கத்திற்கு உங்களை உட்படுத்த வேண்டும். எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பதே சிறந்தவழி. எங்கு உபாதையெனக் கவலைப்பட வேண்டாம். தியானத்தின் போது , பலரை நான் பார்த்திருக்கிறேன். எங்காவது உபாதையிருந்தால் அதிலேயே கவனம் செலுத்துகின்றனர் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை விட்டு விடுங்கள். அது தானாகவே சரிசெய்யப்படும். இது எளிதானது. ஆக நீங்கள் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. இதுதான் தியானமாகும். தியானம் என்பது கடவுளின் அருளுக்கு உங்களை உட்படுத்துவதாகும். அந்தக் கருணைக்கே உங்களை எப்படி குணப்படுத்துவது என்று தெரியும். உங்களை குணப்படுத்தி, உங்களுக்குள் எப்படி தன்னை தக்க வைத்துக் கொள்வது என்று தெரியும். உங்கள் ஆத்மாவைப் பிரகாசிக்கச் செய்யும். அதற்கு அனைத்தும் தெரியும். எனவே நீங்கள் என்ன செய்ய வேண்டும், அல்லது என்ன நாமம் கூற வேண்டும், என்ன மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என்று கவலைப்பட வேண்டியதில்லை. தியானத்தில் நீங்கள் முற்றிலும் முயற்சியின்றி இருக்க வேண்டும். நீங்கள் முழுமையாக உங்களை உட்படுத்த வேண்டும். அச்சமயம் நீங்கள் முற்றிலும் எண்ணங்களற்று இருக்க வேண்டும். ஒரு வேளை, உங்களால் எண்ணங்களற்று இருக்க இயலாத நிலையில் அந்த நேரத்தில் நீங்கள் உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள். ஆனால், அதில் ஈடுபாடு கொள்ள வேண்டாம். சூரியன் மெல்ல உதிக்கும்போது,இருள் நீங்கி சூரியக் கதிர்கள் ஒவ்வொரு மூளை முடுக்குகளில் சென்று அந்த இடத்தை முழுவதுமாக ஒளிபெற செய்வதைக் காண்கிறீர்கள். அது போன்று, உங்கள் தேகம் முற்றிலும் ஒளிபெறும். ஆனால் அச் சமயம் , முயற்சித்தாலோ அல்லது உங்களுக்குள் நடக்கும் ஒன்றை தடுக்க நினைத்தாலோ, அல்லது பந்தன் கொடுக்க முயற்சித்தாலோ அதற்குத் தெரியும். தியானத்திற்கு முயற்சியின்றி இருப்பதுதான் ஒரே வழி. ஆனால், நீங்கள் சோம்பலாக இருத்தல் கூடாது. நீங்கள் உன்னிப்பாக அதைக் கவனிக்க வேண்டும். மற்றொருபுறம், மனிதர்கள் உறங்கி விடுகின்றனர். அப்படியல்ல , நீங்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் உறங்கினால் ஒன்றும் நடக்காது. மறுபுறம் நீங்கள் சோம்பலுடன் இருந்தால் ஒன்றும் நடக்காது. நீங்கள் கவனமாக, ஏற்பதற்குத் தயாராக, முழு விழிப்புடன் இருக்க வேண்டும். முயற்சியே இல்லாது – முற்றிலும் முயற்சியில்லாது. நீங்கள் முற்றிலும் முயற்சியற்று இருந்தால் தியானம் சிறப்பாக அமையும். உங்கள் பிரச்சனைகளைப் பற்றியே சிந்திக்காதீர்கள். எந்த சக்கரம் குறையுடன் இருந்தாலும், எதுவாக இருந்தாலும், உங்களை அதற்கு உட்படுத்தினால் போதும். சூரியன் ஒளி பிரகாசிக்கும் போது, சூரியனுக்கு இயற்கை தன்னை Read More …