The Role of Tongue, Sight and Feet in Spiritual Evolution

New Delhi (India)

1976-04-02 Having A Good Tongue (subtitles), 20' Download subtitles: EN,ES,FI,FR,IT,PL,RO,RU,TA,TR,ZH-HANS,ZH-HANT (12)View subtitles:
Download video - mkv format (standard quality): Watch on Youtube: Listen on Soundcloud: Transcribe/Translate oTranscribeUpload subtitles

Feedback
Share
Upload transcript or translation for this talk

ஒரு தாயாகவும் குருவாகவும் இருப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றி நான் சொல்லிக் கொண்டிருந்தேன்.

ஏனென்றால் இரண்டும் மிகவும் முரண்பாடான செயல்பாடுகள். உங்கள் இரட்சிப்பின் பொறுப்பாளராக இருக்க விரும்பும் ஒரு நபருக்கு, விசேஷமான , மோட் க்ஷ தாயினியாக [விடுதலை வழங்குபவர்], இருப்பது மிகவும் கடினம். பாதையானது மிகவும் மென்மையாகவும், ஏமாற்றும் விதமாகவும் இருப்பதால் நீங்கள் அனைவரும் தாங்களாகவே வந்து கடந்து செல்ல வேண்டும். நீங்கள் இந்த பக்கமாகவோ அல்லது அந்த பக்கமாகவோ விழுந்தால் உங்களுக்கு பேரழிவு ஏற்படும். உங்கள் ஏறுதலை நான் கவனித்து வருகிறேன் ஒரு தாயின் இதயபூர்வமான அன்புடனும் குருவின் வழிகாட்டுதலிலும் நீங்கள் மேலே வருவதை நான் காண்கிறேன். பின்னர் மக்கள் கீழே விழும் காட்சிகளைப் பார்க்கிறேன் . நான் அவர்களிடம், “மேலே வா” என்று சொல்ல முயற்சிக்கிறேன். சில நேரங்களில் நான் கத்துகிறேன், சில நேரங்களில் நான் அவர்களை இழுக்கிறேன், சில நேரங்களில் நான் அவர்களை நேசிக்கிறேன், அவர்களை அரவணைப்பேன். உனக்குள்ளேயே நீயே தீர்மானிக்க முடியும், நான் உன்னிடம் எவ்வளவு உழைத்தேன், உன்னை எவ்வளவு நேசித்தேன் என்று. ஆனால் நீங்கள் உங்களை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

ஒரு சஹஜ யோகியைப் பொறுத்தவரை, முழு விஷயத்தையும் சாட்சி பாவனையுடன் சக்தியால் தீர்மானிக்க வேண்டும் என்று நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். இப்போது சாட்சிபாவனை சக்தியானது அது பேசாமல் அமைதியாக இருக்கிறது . நீங்கள் மிகவும் பேசக்கூடிய நபராக இருந்தால், அது உங்களுக்கு அதிகம் உதவப்போவதில்லை. நீங்கள் சமநிலையில் இருக்க வேண்டும். இந்த அவதாரத்தில் முதன்முறையாக நான் பேசத் தொடங்கினேன், இந்த வகையான பேச எனக்குப் பழக்கமில்லை என்பதால் நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். எனவே, உங்களைப் பொறுத்தவரை, நீங்கள் அதிகம் பேசாமல் இருப்பது அவசியம், நீங்கள் பேச விரும்பும் வரை பேசாமல் இருப்பது அவசியம். மேலும் பேசும் மிகச் சில வாக்கியங்கள், தீர்க்கமானவையாக இருக்க வேண்டும் . நான் முன்பு சொன்னது போல, கவனச்சிதறல்களின் அனைத்து உறுப்புகளுக்கும் நாக்கு தான் தலைவன். உங்கள் நாக்கை நீங்கள் கட்டுப்படுத்த முடிந்தால், நீங்கள் மற்ற அனைத்திலும் தேர்ச்சி பெற்று விடுவீர்கள். ஏனென்றால் நாவுக்கினியவையாக இருக்கும்.

உதாரணமாக, நீங்கள் ஒரு பெண்ணைப் பார்க்கிறீர்கள்: ஆனால் அவளின் பேச்சு இனிமையாக இல்லையென்றால், அவள் அழகாக இருக்கலாம், ஆனால் நீங்கள் அவளைப் பார்க்க விரும்பவில்லை. அவள் ஒரு நபரைப் பற்றி, தீர்மானிக்கிறாள், அவளுடைய நாக்கு தீர்மானிக்கிறது. நீங்கள் சிறிது உணவை சாப்பிட விரும்பினால், அது சுவையாக இல்லாவிட்டால், நீங்கள் அந்த உணவை சாப்பிட மாட்டீர்கள். இது சுவையாக இருக்க வேண்டும். இது போல தான் உங்களது சிந்திக்கும் எண்ணம் கூட.இனிமையானதாக இல்லாவிட்டால் அதை நீங்கள் வைத்து கொள்ள போவதில்லை அது இனிமையானதாக இல்லையென்றால், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டீர்கள். எனவே, தீர்மானிக்கும் காரணி நாக்கு ஆகும். நாவின் வேர் விசுத்தி சக்கரம் வரை செல்கிறது, இது உங்கள் ஈகோ மற்றும் சூப்பர் ஈகோவைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் நாக்கு ஒரு விதத்தில் உங்களது சூப்பர் ஈகோ(மமகாராம்) மற்றும் ஈகோவில் (அகங்காரம்) பிரதிபலிக்கிறது என்று கூறலாம். உங்கள் நாவின் மூலம், நீங்கள் பேசும்போது, நீங்கள் ஈகோ அல்லது சூப்பர் ஈகோ என்ற நிலையில் இருக்கிறீர்களா என்பதை ஒருவர் தீர்மானிக்க முடியும் . அதை அவள் வெளிப்படுத்துகிறாள், அவள் தீர்மானிக்கிறாள்.

ஆனால் நீங்கள் அவளைப் புரிந்து கொண்டால், அவளை எவ்வாறு கையாள்வது என்பது உங்களுக்குத் தெரியும். அவள் உங்கள் தோழி. அதாவது சரஸ்வதியே உங்கள் நாவில் வசிக்கிறார். உங்கள் நாக்கை எவ்வாறு கையாள்வது என்பது உங்களுக்குத் தெரிந்தால், சஹஜ யோகா மிக உயர்வாக உயரக்கூடும்.. ஏனென்றால், மற்றவர்கள் சஹஜ யோகிகளான உங்களைச் சந்திக்கும் போது, , நீங்கள் பேசும் விதம், நீங்கள் உண்ணும் விதம்,எவ்வளவு, அழகாக பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் பார்க்கிறார்கள். எனவே, தீர்மானிக்கும் காரணி நாக்கு. உங்கள் பரிணாம வளர்ச்சியில் முன்னேறியவராக இருந்தால் ஆச்சரியப்படுவீர்கள். நீங்கள் எங்காவது சிறிது உணவை சாப்பிட்டால், உடனடியாக நாக்கு அந்த உணவை வெளியேற்றி விடும். ஏனென்றால் அது ஏற்றுக் கொள்ளாது. சிலர் “பிரசாதம் ” என்று அழைக்கப்படும் ஒன்றை உங்களுக்கு கொடுத்தால், அதை கொடுப்பவர் தவறான மனிதராக, உடனடியாக உங்கள் நாக்கு அதைத் தூக்கி எறிந்து விடும். அது உள்ளே செல்லாது.

நீங்கள் எப்படியாவது அல்லது வேறு எந்த வழியினாலும், அது வயிற்றில் வலுக்கட்டாயமாக கீழே இறக்கினாலும்,, நாக்கு மூளைக்கு “அதை வெளியே எறிந்து விடு!” என்று தெரிவிக்கும். மூளை வயிற்றிற்கு, “வெளியே எறியுங்கள்!” என்று தெரிவிக்கும். இது சுவையற்றதாக இருக்கும். எனவே, வயிற்றில் விஷ்ணுவின் எதிர்வினை, ஸ்ரீ கிருஷ்ணரின் செயல் வரை – அதாவது, அதே ஆளுமை – அனைத்தும் உங்கள் நாக்கால் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, உங்கள் நாக்கு எவ்வளவு தூய்மையாகவும், புனிதமாகவும் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஆனால் இந்த நாவில் உங்கள் தாயின் பெயரை ஆனால் இந்த நாவில் உங்கள் தாயின் பெயரை கூறும்போது, புனிதத்திலும் புனிதமாக இருக்க வேண்டும். உங்கள் நாக்கை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். மிகவும் அப்பட்டமாகப் பேசுபவர்கள் மிகவும் இனிமையாகப் பேசுபவர்களைப் போலவே இருக்கிறார்கள்: உங்களிடமிருந்து எதையாவது பெறுவதே நோக்கம். நோக்கம் [அது முக்கியம்]. நான் உங்களுக்குச் சொன்னது போல, அது ஈகோ மற்றும் சூப்பர் ஈகோவைக் கட்டுப்படுத்துகிறது.

விஷுத்தி சக்கரத்தில் சாட்சி பாவனையில் இருக்கிறது என்பதை, சஹஜ யோகிகள் கூட புரிந்துகொள்கிறார்கள். எனவே உங்கள் சாட்சி பாவனைக்குரிய சக்தியானது உங்கள் நாக்கின் தன்மைக்கு ஏற்ப கூடும் மற்றும் குறையும். இது பதினாறு துணை-பிளெக்ஸஸைக் கட்டுப்படுத்துகிறது. இது கண்களின் தசைகளையும் கட்டுப்படுத்துகிறது, இது இந்த தசைகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. இது மேல்வாயை கட்டுப்படுத்துகிறது, இது பற்களைக் கட்டுப்படுத்துகிறது. இது காதுகளைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால் காதுகளால், நீங்கள் எதையாவது கேட்கிறீர்கள் — [ஆனால்] அதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. நாவினால் முடியும், — ஏனென்றால் நாக்கு வெளியிடும் விஷயம், வெளியே செல்கிறது. காது மூலம் நீங்கள் மற்றவர்களுக்கு எதையும் கொடுக்க முடியாது. அது ஒரே வழி பாதை.

இந்த [நாக்கு] இரட்டை வழி விஷயம்: நீங்கள் எதையாவது எடுத்துக் கொள்ளலாம் , இது மேலும் எதையாவது தூக்கியும் எறியலாம். இது இரட்டை நோக்கத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு மிக முக்கியமான உறுப்பு, அதனால்தான் நம் நாக்குகளை நாம் கவனிக்க வேண்டும். குண்டலினி உயரும் போது, ஒரு விஷயம் நடக்கிறது — அதாவது இப்போது உங்கள் கவனம் நுட்பமாகி விடுகிறது. மேலோட்டத்திலிருந்து நுட்பமாகி விடுகிறது. ஆனால் அது நுட்பமாகவும் நுட்பமானதாகவும் மாற வேண்டும், மேலும் அதைத் தாண்டி செல்ல வேண்டும். நுட்பமாக மாறுவதன் மூலம், அது ஆக்ஞா சக்கரம் வழியாக வருகிறது. ஏனென்றால் ஆக்ஞா சக்கரம் ஒரு ஊசியின் துளை போன்றது. எனவே அது அதன் வழியாக, அங்குள்ள நுட்பமான வழியாக ஊடுருவுகிறது. அந்த நுட்பத்தின் காரணமாக, உங்கள் கவனம் ஒரு நுட்பமான வடிவத்தில் ,எல்லாவற்றையும் பார்க்கிறது.

இப்போது, இது உங்களுக்கு ஒரு புதிய அனுபவம், அதனால்தான் அது என்னவென்று உங்களுக்குத் தெரியவில்லை. சஹஜ யோகிகளின் கூட்டத்தில், நீங்கள் இந்த விஷயங்களை மிகவும் கவனமாகவும் தெளிவாகவும் காணலாம். ஒரு நபர் சுற்றிலும் கண்களை அசைத்துக் கொண்டு, பார்க்கிறார். அவர் ஒரு சஹஜ யோகி; அவர் உட்கார்ந்திருக்கிறார், அவர் இங்கே பார்க்கிறார், அங்கே பார்க்கிறார், அந்தப் பக்கத்தைப் பார்க்கிறார், யார் வருகிறார்கள், யார் போகிறார்கள். நிச்சயமாக, இந்த நபர் இன்னும் நீங்கள் சொல்லக்கூடிய மந்த நிலையில் இருக்கிறார், மாதாஜி அதை வெளியே இழுத்ததன் மூலம் அவர் இங்கே தனது கவனத்தை ஈர்த்திருந்தாலும், நீங்கள் பார்த்தீர்களானால், மீண்டும் கவனத்தை சிதற விடுகிறீர்கள்! (சிரிக்கிறார்) ஆனால் இன்னும் அந்த நபர் தன்னை மொத்தமாக வெளியே கொண்டு செல்கிறார். எனவே, அந்த மாதிரியானவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஆனால் இப்போது கூட கவனத்துடன் — கவனித்தீர்களானால், அவரது கவனம், சிதறலால் வார்த்தைகள் அவ்வளவு துல்லியமாக இருக்காது — அத்தகைய நபரை நீங்கள் கவனித்தாலும், அவருடைய இரண்டு சக்திகளும் மிகவும் நுட்பமான முறையில் செயல்படுவதை நீங்கள் காண்பீர்கள்: ஒன்று அவருடைய நுட்பமான அகங்காரம், மற்றொன்று நுட்பமான மமகாரம். நீங்கள் நுண்ணிய உணர்வை பெரும் போது எதிர்பாராமல் நுண்ணிய சக்திகளையும் பெறுவீர்கள். இப்போது அகங்காரத்தைப் பற்றி பார்ப்போம்.

மிக நுட்பமான முறையில் இருக்கும் அகங்காரத்தை— அகங்காரத்தை நீங்கள் கண்டு கொள்வது மிகவும் கடினம், அங்கீகரிக்க முடியாத அளவுக்கு நுட்பமானது – குணப்படுத்துவதற்கான சக்தி உங்களுக்கு இப்போது உள்ளது. இப்போது குண்டலினியை உயர்த்தும் சக்தி உங்களிடம் இருப்பதாக நீங்கள் உணர ஆரம்பிக்கிறீர்கள். அது உங்களுக்குள் எவ்வாறு படிந்து செல்கிறது என்பதைப் பாருங்கள். நீங்கள் சஹஜயோகாவினால் உங்களுக்குள் உள்ள உங்களது சக்தியை உணர ஆரம்பிக்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் சஹஜயோகாவை கற்றுக் கொண்டு விட்டோம் மற்றும் அதன் சாராம்சத்தைப் பற்றியும் தெரிந்து கொண்டோம் மற்றும் அதை பற்றி பேசலாம். இந்த நுட்பமான ஈகோ உங்களுக்குள் உருவாகிறது. நான்காவது வகையான நுட்பமான ஈகோவானது நீங்கள் மற்ற நபரைப் பார்க்கும்போது சூப்பர் ஈகோ உருவாகிறது. அதுதான் மிகவும் ஆபத்தானது! முந்தைய கால குருக்களிடம் … பழைய நிகழ்வுகள்(சம்பவங்கள்) சிலருக்கு இருந்ததால், அது இப்போது சிலரின் மமகாரம் உருவாகியுள்ளது: முந்தைய பிரச்சனைகள், முந்தைய… நீங்கள் பார்க்கிறீர்கள், மதத்தைப் பின்பற்றும் விதம்,அனைத்தும், அவர்களின் தவறுகளால், அவர்களின் சூப்பர் ஈகோ உருவாகிறது. அவர்களுக்கு ஏதோ நடக்கிறது என்பதை நீங்கள் காண்கிறீர்கள்.

மிஸ்டர். எக்ஸ் Yஐப் பார்க்கிறார் என்று கூறுங்கள்: ஒரு மமகாராம் அவரிடமிருந்து அவருக்கு வருகிறது, சில எதிர்மறை சக்திகள் அவனுக்குள் பாய்கிறது. எனவே அவரது ஈகோ அந்த சக்திக்கு எதிராக ஒரு நுட்பமான வழியில் வளரத் தொடங்குகிறது. இப்போது அவர் அதை ஒரு நேர்மறையான சக்தி என்று அழைக்கிறார் — அது ஒரு நேர்மறையான சக்தி என்பதில் , சந்தேகமில்லை — ஆனால் அவர் அதை மீறி கடக்கிறார். அவர் அந்தப் பக்கத்தைக் கடக்கும்போது, அவர் வேறொரு நபரின் சூப்பர் ஈகோவைத் தள்ள முயற்சிக்கிறார் [மேலும்] அவருடைய உரிமையை தடுக்கிறார். அவர் தான் சரியானதை தான் செய்கிறோம் என்று நினைக்கிறார். நிச்சயமாக, அவர் ஒரு தனி வழியில் செல்கிறார் — ஆனால் ஒரு கட்டத்திற்கு [மட்டுமே] மேல் . அவர் மிகவும் சூடான மனநிலைக்கு மாறுகிறார். அவர் மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களைக் கடந்து செல்கிறார். அவர் மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை கூறிக் கொண்டே போகிறார்.

நுட்பமான புள்ளி இப்படித்தான் தொடங்குகிறது. ஒரு கட்டத்திற்கு எல்லாம் சரி, ஒரு கட்டம் வரை, ஏனென்றால், இதில் நான் கணேஷையும் இயேசுவையும் தீர்ப்பளிக்கும் இடமாக கருத வேண்டும் என்று கூறுவேன். கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது அவர் கவலைப்படவில்லை. அது மட்டுமல்லாமல் அவர் அனைவருக்காகவும் மன்னிப்பு கேட்டார். ஆனால் அவரது தாயாரை யாராவது தொட்டிருந்தால், அவர் தனது பதினொரு ருத்ரர்களை வெளியே எடுத்து அவர்களைக் கொன்றிருப்பார். அதுதான் முக்கியம். நீங்கள் உங்கள் தாயிடம் வரும்போது நிச்சயமாக, உங்கள் ஈகோ மற்றும் சூப்பர் ஈகோ இரண்டிற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆனால் அதையும் மீறி, ஒவ்வொரு சஹஜ யோகியிலும் இது இயக்கத் தொடங்குகிறது என்றால், சமநிலை எங்கே இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. உதாரணமாக, அப்படிப்பட்டவர்கள், அவர்களுக்கும் எதைச் செய்தாலும், அவர்கள் தங்களை அன்னையுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள், அவர்கள் நினைக்கிறார்கள், மேலும் அவர்கள் “இல்லை, இல்லை, அவர் அதை என்னிடம் சொன்னார், அதாவது அது அம்மாவிற்கு சேர்ந்தது தான்.” என்று நினைக்கிறார்கள்.

அது அவ்வாறு அல்ல உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும், நீங்கள் எங்கு விமர்சிக்கப்படுகிறீர்களோ , அங்கு உங்கள் தாயும் விமர்சிக்கப்படுகிறார். இவை இரண்டு விஷயங்கள் ஆகும். அதனால்தான் நான் [தீர்ப்பளிக்கும் இடம் கிறிஸ்து என்று சொன்னேன். அவர் சிலுவையில் அறையப்பட்டபோது, அவர் அதை ஏற்றுக்கொண்டார், மேலும் அவர் தனது தாயுடன் ஒன்றிணைந்து இருந்தாலும், இன்னும் அவர் அந்த சமநிலையிலேயே இருக்கிறார். நீங்கள் சிலுவையில் அறையப்படும்போது, நீங்கள் கிறிஸ்து அல்ல. ஆனால் அம்மாவுக்கு எதிராக யாராவது ஏதாவது சொன்னால், அவ்வளவு தான். இப்போது உங்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இப்போது உங்களை நீங்களே கவனியுங்கள். நான் என்ன சொன்னாலும் அது உங்கள் நன்மைக்காக என்று நீங்களே உங்களை கவனியுங்கள். அப்படித்தான் சூப்பர் ஈகோ படையெடுப்பைப் பெறும் நபரை எங்காவது நீங்கள் காணலாம்.

முதலாவதாக, சூப்பர் ஈகோ படையெடுப்பு மிக மிக ஆழமானது மற்றும் நுட்பமானது, இது மிகவும் ஆழமானது. உங்களுக்குப் புரியாத வகையில் அது உங்களுக்குள் வருகிறது. மிகவும் நேர்மறையாக இருக்கும் மற்றொரு நபர், “அந்த நபருக்கு ஒரு எதிர்மறை உள்ளது” என்று நினைப்பார். அதாவது அவர் எதிர்மறையை நோக்கிய தனது நேர்மறை சக்தியை மீறுகிறார் என்பது அவருக்குத் தெரியாது. ஏனென்றால் இந்தக் கோட்டைத் தாண்டியவுடன் இந்தப் பக்கம் செல்கிறீர்கள். இந்தக் கோட்டைத் தாண்டியவுடன் இந்தப் பக்கம் செல்லுங்கள். எனவே நீங்கள் இந்த புள்ளியை கடந்தவுடன் உடனடியாக எதிர்மறையாகி விடுகிறீர்கள். அது சஹஸ்ராரம், பிரம்மரந்திரா. பிரம்மராந்திராவைத் தாண்டி, கீழே தள்ளினால், நீங்கள் மறுபக்கம் செல்கிறீர்கள். நீங்கள் மற்றவர்களின் கைப்பொருளாக மாற்றப்படுகிறீர்கள்.

இப்போது, உங்களை நீங்களே தீர்மானித்து, “இப்போது, ஹலோ மிஸ்டர் எக்ஸ், நீங்கள் இப்போது எப்படி நடந்துகொள்கிறீர்கள்?” என்று பார்க்க வேண்டும் உடனே நீங்கள் சாட்சியாகிவிடுகிறீர்கள், பார்க்கிறீர்கள், நீங்களே சாட்சியாக ஆகிறீர்கள். இப்போது, எப்படி சூப்பர் ஈகோ மற்றும் ஈகோ? நீங்கள் சில நேரங்களில்… சில நபர்களில் சில நேரங்களில் ஈகோ சூப்பர் ஈகோவை அழுத்துகிறது மற்றும் சூப்பர் ஈகோ ஈகோவை அழுத்துகிறது. நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் அகங்காரம் கொண்டவர்களா அல்லது தன் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்களா என்பது அவர்களுக்குத் தெரியாது. உண்மையில் அவர்களுக்கு தெரியாது. அவர்களால் தீர்மானிக்க முடியாது. ஏனென்றால் இது எல்லா நேரத்திலும் நடக்கிறது, எல்லா நேரத்திலும் தள்ளாட்டமாக இருக்கும். அதனால்தான் “பைதக்” என்று சொல்கிறேன். [அதாவது] நீங்கள் உட்கார வேண்டும், குடியேற வேண்டும்.

நீங்களே பாருங்கள். “நான் குடியேறினேனா?”. உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் சக்தியை உணர முடிந்தாலும், உண்மையில் இந்த பக்கத்திலிருந்து இந்த பக்கத்திற்கு நகரும் சக்தியை நீங்கள் உணர முடியும். இந்த பக்கத்திலிருந்து இந்த பக்கத்திற்கு நகரும் சக்தியை நீங்கள் உணருவீர்கள்; அதை மையத்தில் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். இப்போது, ஈகோ மற்றும் சூப்பர் ஈகோ, அவை அப்படிச் செல்லும்போது, நீங்கள் ஒன்றுக்கொன்று தள்ளாடியதாகக் கூறலாம், இது இப்படி நடக்கும் போது: ஒரு கணத்தில் நீங்கள் மனச்சோர்வடைந்த, விரக்தியடைந்து, உங்களைப் பற்றி சிந்தனையில் சோர்வடையத் தொடங்குகிறீர்கள்:, உங்களுக்குள் “முட்டாள்தனமானது! வெளியே போ!” என்று கூற வேண்டும் . அந்த தருணத்தில் நீங்கள் உட்கார்ந்து கொண்டும் மற்றவர்களையும் உட்கார சொல்ல வேண்டும். நீங்கள் அவர்களிடம், “வெளியேறு!

இது மோசம்! நான் அந்த மனிதனை விரும்பவில்லை! ” என்று கூறுவதும் “அந்த நபர் வந்தார், அந்த நபர் என்னைப் பிடித்தார்!” “அது நடந்தது,இது நடந்தது…” என்று நீங்கள் நகரும் இரண்டு உச்சநிலைகளும் சஹஜ யோகாவுக்குரிய வழி அல்ல. சஹஜ யோகா – சஹ-ஜ என்றால் நீங்கள் ஒரு சாட்சி பாவனை என்று பொருள். சஹ-ஜ – இதற்கு இரட்டை அர்த்தம் உள்ளது. பொதுவாக பயன்படுத்தப்படும் சொல் சஹஜ ‘எளிய’ – ஸஹஜ் என்ற சொல்லுக்குப் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ஒரு சஹஜ் முறையில் இருக்கிறீர்கள்,,அதாவது நீங்கள் ஒரு சாட்சிபாவனையில் இருந்து அதைப் பார்க்கிறீர்கள். இந்த மரங்களைப் பாருங்கள், அவர்கள்(மரங்கள்) சாட்சியாக இருக்கிறார்கள், அவர்கள் எதுவும் சொல்லவில்லை, அவர்கள் அங்கேதான் இருக்கிறார்கள். அது ‘இருப்பது’.

இந்த இடத்தில் தான் இருக்க வேண்டும். நாம் அப்படியா? ஒவ்வொரு அசைவும், எதையும் கையாள்வது? அப்போது உங்களுக்கு எந்த நிறுவன பிரச்சனையும் வராது. நீங்கள் ஒரு சாட்சிபாவனையில் இல்லாமல் இருந்திருந்தால் உங்களுக்கு நிறுவன சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கும்.. நீங்கள் இரண்டு வகையான மக்களைக் காண்பீர்கள்; “நான் மிகவும் கஷ்டப்படுகிறேன்” என்று ஒருவர் கூறுவார், மற்றவர்கள் “இல்லை, நான் அல்ல! “என்று கூறுவார், பின்னர் அவர்களும் பரிமாறிக் கொள்கிறார்கள், அவர்களின் அணுகுமுறைகள் மாறுகின்றன, பின் அவர்கள் ஒன்றிணைந்து விடுவார்கள். ( சிரிக்கிறார் ). ஆனால் அவர்கள் எப்பொழுது அவர்களின் அணுகுமுறைகளை நிறுத்திக் கொள்வார்கள் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம். ஒரு நிமிடம் பேசிவிட்டு அமைதியாகி விடுவீர்கள். ஒரு நிமிடம் பேசிய பிறகு நீங்கள் அமைதியாகிவிடுவீர்கள், அதுவே சிறந்த வழி, நான் நினைக்கிறேன், நான் சொல்ல முடியும், ஒரு நடைமுறை வழி — உங்கள் நாக்கு அமைதியாக இருக்க வேண்டும்.

இயன்றவரை அமைதியாகவும் பார்த்துக் கொண்டும் இருக்க வேண்டும். ஆனால் சிலர் மௌனமாக இருக்கிறார்கள், அதுதான் நீங்கள் செய்யும் மோசமான காரியம். இல்லை, அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். மற்றவர்களை எப்படி காயப்படுத்துவது என்று திட்டமிடுவதும் ஆகும் . பின்னர் திடீரென்று உங்களுடைய வார்த்தைகள் உங்களிடமிருந்து வெளிவரும், இது மிகவும் கேவலமாகவும், நறுக்கென்றும் , மிகவும் கொடூரமானதாகவும், விஷம் நிறைந்ததாகவும் அந்த வார்த்தைகள் இருக்கும் நீங்கள் “எங்கிருந்து இப்படி வந்தது? அட கடவுளே!” என்று நினைப்பீர்கள். அமைதி முற்றிலும் பயனற்றது. ஓடும் ஆறு போல் இருக்க வேண்டும். ஆற்றுக்கு அதன் சொந்தமான ஆழம் உள்ளது மற்றும் அந்த ஆழத்தின் மேல் அது பாய்கிறது.

இது ஒரு நிறைவானது ஆகும். அப்படி ஒரு மௌனம் இருக்க வேண்டும். கட்டாயப்படுத்தப்பட்ட ஒன்றல்ல, சாட்சியின் மௌனம். அத்தகைய ஒருவர் பேசும்போது கூட [ஆனால்], அவருக்குள்ளே, அமைதியின் ஓட்டம் இருக்கும். நீங்கள் அந்த வகையான அமைதியுடன் இருக்கும் போது அது உங்களை எப்போதும் நிரம்பிய மனதுடன் இருக்க வைக்கும். ஒவ்வொரு இலையிலும், இலையின் ஒவ்வொரு அசைவிலும், அந்த வகையான, அமைதி பாய்வதை நீங்கள் காணலாம். அவைகள் பேசுவதில்லை, ஆனால் அவை வெளிப்படுத்துகின்றன. அதே வழியில், நீங்களும் பேசாமல், உங்களை வெளிப்படுத்துங்கள். நிச்சயமாக, மனிதர்கள் பேசுதல் என்பது அவைகளை விட உயர்ந்தவர்கள் ஆகும் , ஆனால் நீங்க பேசும் பேச்சு ஒரு சுமையாக, பிரச்சனையாக, வெட்டும் கருவியாக மாறினால், பேசாமல் இருப்பது தான் நல்லது. ஒரு சஹஜ யோகி தெரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம்: சஹஜ யோகாவில் கண்கள் மிகவும் முக்கியம்.

குண்டலினி உயரும்போது, கண்மணி விரிவு ஏற்படுகிறது ஏனென்றால் … குழந்தைகளை பார்க்கும் போது உங்கள் கண்கள் எப்படி விரிந்து இருக்கும், என்பதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள்.நடக்கும் எல்லாவற்றையும் அவர்கள் ஒரு இடைவெளியுடன். வெறும் இடைவெளி, அமைதியான, முழுமையான அமைதியாக கண்களால் மட்டுமே பார்த்து கொண்டு இருப்பார்கள்.அதனால்தான் கண்கள் மிகவும் முக்கியம் உங்கள் கண்களை உங்களுக்குள், உங்கள் இதயத்தில் நிலைநிறுத்த கற்றுக்கொள்ள வேண்டும். இதயபூர்வமாக பணிவுடன் இருக்க வேண்டும். உங்கள் கண்களை உங்கள் இதயத்தில் நிலைநிறுத்துங்கள். நான் அப்படிச் சொல்கிறேன், ஆனால் உங்களால் அதைச் செய்ய முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் அதை செய்ய முடியுமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் அதைச் செய்ய முடிந்தால், அது தான் செய்வதற்கான மிகச் சிறந்த வழியாகும். எல்லோரையும் பார்ப்பது, அனைவரையும் பார்ப்பது, இதைப் பார்ப்பது, உங்கள் கண்களுக்கு மிகவும் மோசமான உடற்பயிற்சி, இது மிகவும் மோசமான பழக்கம். உங்கள் கண்களை தாழ்வாக வைக்க முயற்சி செய்யுங்கள், பூமியில், பூமித் தாயின் மீது , முகத்தை விட உடலின் கீழ்பகுதியான பூமியைப் பாருங்கள். ஏனெனில் அதை எதிர்நோக்கும் போது, நீங்கள் அதை எதிர்நோக்குவதை உங்களால் பார்க்க முடிந்தால், அது சரி, அந்தளவிற்கு நீங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை.

சிறந்த விஷயம் கால்களைப் பார்ப்பது. உங்கள் கண்கள் அவற்றின் மொத்த உணர்வும், பாதங்களைத் தொடும், அங்கிருந்து அதிர்வுகளின் உணர்வு மேலே செல்கிறது, மேல்நோக்கி செல்லும், மற்றும் குண்டலினி சிறப்பாக உயரும். உண்மையில் குறைந்த குண்டலினி எழுச்சியால் அவதிப்படுபவர்கள், தங்கள் கால்களில் எண்ணெய் தேய்த்து, கால்களைக் கழுவினால், அது மிகவும் நல்லது. அதனால்தான் கிறிஸ்து தம் சீடர்களின் பாதங்களைக் கழுவினார். நீங்கள் என்னை நுணுக்கமாக அனுமதித்தால், நான் அதைச் செய்ய விரும்புகிறேன். முழு ஸ்தூலமும் பாதங்களில் இருப்பதால், நீங்கள் யாரையாவது உங்கள் கண்களால் தொட்டால், — நான் கூறுவது ஆத்ம உணர்வு பெற்றவர்கள் — அவர்களின் கால்களில் உள்ள மோசமான தன்மை மறைந்துவிடும். அவர்களினால் உங்களுக்கு அவ்வளவு பிரச்சனைகள் ஏற்படாது. அதனால்தான் கிறிஸ்து தம்முடைய சீஷ்யர்களின் கால்களைக் கழுவினார். நீங்கள் உங்கள் கால்களைக் கழுவி, அவற்றை சுத்தமாக வைத்திருங்கள், இதனால் மோசமான தன்மை வெளியேறி விடும். நான் சுருக்கமாக விளக்கினேன், ஆனால் நீங்கள் என்னிடம் கேள்விகளைக் கேட்க விரும்பினால், கேளுங்கள், ஏனென்றால் சஹஜ யோகிகள் தங்களால் முடிந்தவரை வேகமாக உயரவில்லை என்பதை நான் காண்கிறேன்.

ஏனென்றால், குண்டலினியை இந்தளவிற்கு கொண்டுவருவது, இது வரை எனக்கு சாத்தியம், ஆனால் அதை மீண்டும் உங்களுக்குள் மொத்தமாக கொண்டு வருவது உங்கள் சொந்த முயற்சியாகும்., அதை நீங்கள் தான் செய்ய வேண்டும். மராத்தியில் அவர்கள் சொல்வது போல், “டா ஆதி கராட்சா மாகா பியா” — நான் உங்களுக்காக மேலே , குவிமாடம் கட்டியுள்ளேன், குவிமாடம் இப்போது உங்களுக்கு ஆதரவளிக்க உள்ளது. நான் உங்களை குவிமாடத்திற்கு அழைத்துச் சென்றேன், ஆனால் அதை உன்னால் வீழ்த்த முடியாது ஏனென்றால் நீங்களே உங்களைப் பற்றி விரக்தியடைந்துள்ளீர்கள் — ஆனால் விரக்தியடைந்து நீங்கள் எதைப் பெறப் போகிறீர்கள்? – இல்லையெனில், நீங்கள் மற்றவர்களுடன் விரக்தியடைகிறீர்கள். அமைதியாக இருங்கள், சாட்சியாக இருங்கள். சாய் பாபா கூறியது போல், “சபுரி”, பொறுமை, அது உள்ளே வருகிறது.