Talk about all Chakras

Errol Douglas, London (England)

2000-09-28 Talk about all Chakras, London, England, DP-RAW, 96' Chapters: Arrival, Preparations, Talk, Q&A, Self-Realization, Workshop, DepartureDownload subtitles: EN,PT,TA (3)View subtitles:
Download video - mkv format (standard quality): Download video - mpg format (full quality): Watch on Youtube: Watch and download video - mp4 format on Vimeo: Listen on Soundcloud: Transcribe/Translate oTranscribeUpload subtitles

Feedback
Share
Upload transcript or translation for this talk

இத்தகைய ஒரு தனித்துவம் வாய்ந்த கூட்டத்திற்கு என்னை அழைத்ததற்காக திரு எம்ரோவுக்கு நன்றி.

இந்த தலைப்பு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது அதாவது, எப்படி சகஜ யோகா அழகுக்கு உதவும். இப்போது சகஜ யோகா, உங்களுக்குத் தெரிந்தபடி, இங்கே அது காட்டப்பட்டுள்ளது நீங்கள் பார்ப்பது போல், உங்கள் முக்கோண எலும்பில் ஒரு சக்தி இருக்கிறது. இது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது – ஒவ்வொரு (மனிதனுக்கும்). மேலும் இந்த சக்தி எழுப்பப்பட வேண்டும். பின்னர் அது இந்த ஆறு மையங்கள் வழியாக செல்கிறது. ஏழாவது கீழே உள்ளது, எண் ஒன்று, மற்றும் உங்கள் உச்சிக்குழி எலும்பு பகுதி வழியாக துளைத்து உங்களை தெய்வீகத்துடன் இணைக்கிறது. அதன் விளைவாக, இந்த மையங்கள் அனைத்தும் – இவற்றின் பொறுப்பான நம் உடல், மன, உணர்ச்சி மேலும் ஆன்மீக இருப்பும் அவை அனைத்தும் அறிவொளி பெற்று ஒருங்கிணைகின்றன. இந்த சக்தி அனைவரிடமும் உள்ளது. ஆனால் அதைப் பற்றி பேசும் பொழுது, மக்கள் அதை நம்புவதில்லை. உங்களுக்கு அதன் அனுபவம் கிடைக்க வேண்டும்.

உங்களுக்கு அந்த அனுபவம் கிடைத்தவுடன், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், நீங்கள் கற்பனை கூட செய்ய முடியாத பல விஷயங்கள் உங்களுக்கு எப்படி நடக்கிறது என்று! அந்த வகையில், அவர் என்னை இங்கே அழைத்தது மிகவும் கனிவானது அந்த வகையினர் பலரை நான் சந்தித்திருக்கிறேன் ஆனால் இந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள கூடியவர்களை அழைக்க யாரும் முயற்சித்ததில்லை இப்போது அழகுக்கு வருகிறேன், தெய்வீகம் தான் மிக அழகான விஷயம் என்று நான் உங்களுக்கு கூற வேண்டும் ஏனென்றால் அது எல்லா அழகிய பொருட்களையும் உருவாக்குகிறது. இயற்கையை நீங்கள் பார்த்தால், ஒவ்வொரு இலையும் மற்றொன்றிலிருந்து வேறுபட்டது. அவ்வளவு வகைகள்! மேலும், நீங்கள் பார்த்தால், அனைத்து இலைகளும் சூரிய ஒளியைப் பெறும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அத்தகைய கருதுதல்! அத்தகைய புரிதல்! அதேபோல், தெய்வீகம் உங்களுள் வேலை செய்யும் போது, உங்களுக்கும் அந்த திறன் உள்ளது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் புரிந்து கொள்ளவும் மற்றும் முழுமையின் ஒரு அங்கமாகவும் இருக்கவும். நீங்கள் மட்டுமல்ல, தனி நபர் (எல்லாம்). இப்போது, ​​ஒரு விஷயம் உள்ளது.

அதாவது, மக்கள் இப்போது தங்கள் அழகின் மீது நினைப்பாயிருக்கிறார்கள். ஆனால் ஒருவேளை நாம் எப்படி நம் அழகைக் கெடுக்கிறோம் என்றுத் தெரியாமால் இருக்கலாம். முதலில், நம் அழகு எப்படி கெடுகிறது என்று பார்ப்போம். இது சில நேரங்களில் முகத்தில் நிறைய சுருக்கங்களைக் காட்டி கெடுகிறது. இப்போது ​​எனக்கு 77 வயதாகிறது. மிக விரைவில் எனக்கு 78 ஆக போகிறது. மேலும் நான் ஒரு பாட்டியார். எனக்கு சுருக்கங்களே இல்லை. என் மகள்களுக்கும் இல்லை. காரணம் இது தான், பொதுவாக மனிதர்கள் குறிப்பாக பெண்கள், மிகவும் எதிர்வினையாற்றுகிறார்கள், எல்லாவற்றிற்கும் எதிர்வினை புரிவார்கள்.

அவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தாலும், அவர்கள் எதிர்வினையாற்றுகிறார்கள், மற்றவர்களின் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அவர்கள் எதிர்வினையாற்றுவார்கள், மற்ற தளங்களில் என்ன நடந்தாலும், அவை எதிர்வினையாற்றுகின்றன. எதிர்வினை செய்வதன் மூலம், நீங்கள் எதையும் அடைய முடியாது. நீங்கள் எதையும் சாதிப்பதில்லை. எனவே, முதல் விஷயம், அது நடக்கும் போது, ​​நீங்கள் எதிர்வினையாற்ற வேண்டாம் என்று நான் கூறுவேன். நீங்கள் பார்க்க மட்டும் செய்யுங்கள். நீங்கள் ஒரு சாட்சியாக இருங்கள். நீங்கள் முழு விஷயத்திற்கும் சாட்சியாக ஆகிறீர்கள். மேலும் இவை நிகழும்போது, ​​ எங்கோ தெரியாத இடத்திலிருந்து படைப்பாற்றல் வரத் தொடங்குகிறது, உங்களால் எவ்வாறு பொருட்களை உருவாக்க முடிகிறது என்பதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள் எந்த புத்தகத்தையும் படிக்காமல், எந்த உதவியும் இல்லாமல், திடீரென்று நீங்கள் மிக மிக ஆக்கப்பூர்வமாக ஆகிறீர்கள். சகஜ யோகாவில், மக்கள் எப்படி படைப்பாற்றலில் பெரும் உயரங்களை அடைந்தார்கள் என்று பார்த்திருக்கிறேன் விளையாட்டுகளில், எல்லாவற்றிலும் ஏனென்றால் அவர்களுக்குள் இந்த ஆற்றல், தெய்வீக ஆற்றல் கிடைக்கிறது. எனவே, அவர்களும் புரிந்துகொள்கிறார்கள், அவர்கள் இன்னும் பொறுமையாக இருக்க வேண்டும் தங்கள் மீதும், பிறர் மீதும் மேலும் அன்பாகவும் அதிக அக்கறையுடனும் இருக்க வேண்டுமென்று.

அது நடந்தவுடன் – இது மிகவும் அழகாக செய்யப்படுவதை நான் பார்த்தேன் – அதாவது, நீங்கள் மக்கள் மீது அக்கறை கொள்ளத் தொடங்குகிறீர்கள். உங்கள் வாடிக்கையாளர்களைப் புரிந்துகொண்டு அவர்கள் மீது அக்கறை கொள்ளத் தொடங்குகிறீர்கள். அதோடு உங்கள் படைப்பாற்றலும். நீங்கள் மற்றவர்களிடமிருந்து யோசனைகளை இரவல் வாங்கமாட்டீர்கள் உங்கள் சொந்த பித்துப்பிடித்த சிந்தனையால் நீங்கள் கற்றுக்கொள்ளாமல், ஆனால் நீங்கள் உண்மையில் ஆக்கப்பூர்வமாக ஆகிறீர்கள் தெய்வீக வழிகாட்டுதலில். தெய்வீகம் செயல்படத் தொடங்கும் போது, ​​அது பரிபூரணமாகிறது. முழுமை/பூரணத்துவம் போட்டி இல்லை. நீங்கள் போட்டிக்காக உருவாக்காமல், ஆனால் உருவாக்குவதற்காக மட்டுமே செய்வீர்கள். சுதந்திரமாக. எந்த கட்டாயமும் இல்லாமல். மேலும், நீங்கள் உருவாக்கத் தொடங்கியதும், ​​உங்களைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் எப்படி நீங்கள் இவற்றை எல்லாம் உருவாக்க முடிகிறது என்று!

உங்களுக்கு இருக்கும் ஞானத்தை கொண்டு, உங்களுடைய அனுபவத்தைக் கொண்டு இவை அனைத்தும் நடக்கும். திரு.எம்ரோ விஷயத்தில் அது நடந்ததில் மகிழ்ச்சி மேலும் அவர் இதை உங்களுக்கு பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று எடுத்துக்கொண்டதற்கு. இப்போது நவீன காலத்தில், ஃபேஷன் மிகவும் பிரபலமாகிவிட்டது. அதனால் பரவாயில்லை. ஆனால் நீங்கள் (பயன்படுத்தும்) ஃபேஷன் உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தூரம் உதவியாக இருக்கிறது என்று நீங்கள் பார்க்க வேண்டும். இப்போது நான் சில விஷயங்களை வெளிப்படுத்தினால், நீங்கள் அதிர்ச்சியடைய வேண்டாம் மற்றும் கவலைப்பட வேண்டாம் இந்த மையங்கள் அனைத்தும் நமது உடலின் பல்வேறு பகுதிகளில் வெளிப்படுத்தப்படுகிறது. உதாரணமாக, நீங்கள் பார்க்கும் இந்த பச்சை நிறமானது, இது இங்கே நாபியில் உள்ளது, இந்த இரண்டு முழங்கால்களிலும் வெளிப்படுத்தப்படுகிறது. மிக முக்கியமானது. இரண்டு முழங்கால்கள் – மிகவும் முக்கியம் ஆகும். எனவே, நீங்கள் உங்கள் முழங்கால்களை சரியான ஆரோக்கியத்துடன் வைத்திருக்க விரும்பினால் முழங்கால்கள் வெளியே தெரியக்கூடாது முழங்கால்கள் வெளியே தெரிந்தால், எல்லோரும் அதைப் பார்ப்பார்கள்.

மேலும், சுற்றி பல எதிர்மறை சக்திகள் உள்ளன. முழங்கால்களை வெளிப்படுத்துவதால் என்ன பயன்? எனக்கு புரியவில்லை. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, யாரும் அதை செய்யவில்லை. ஆனால் இப்போது திடீரென்று ஃபேஷன் தொடங்கியுள்ளது, நீங்கள் அதற்காக முழங்கால்களை வெளிப்படுத்துகிறீர்கள். மற்றும் முழங்கால்களை வெளியே காட்டுவதன் மூலம், மிகவும் மோசமான முழங்கால்களுடன் முடிவடையும், நீங்கள் நடக்க கூட முடியாது. என் வயதில் – நீங்கள் அடைய கூட முடியாது. எனவே அதை மறைக்கப்பட வேண்டும். இப்போது நீங்கள் இங்கிலாந்திலோ மேற்கில் எங்கோ மூடப்பட்ட முழங்காலுடன் (ஆடை) அணிந்தால், அவர்கள் உங்களிடம், “நீங்கள் துருக்கியரா?” என்று கேட்பார்கள்.

இப்போது, ​​துருக்கியில் அவர்கள் இதை அறிந்திருக்கிறார்கள். துருக்கிய மக்கள் இன்னும் பாரம்பரியமாக இருக்கிறார்கள் – அவர்களுக்கு தெரியும், அவர்கள் முழங்கால்களை வெளிகாட்ட மாட்டார்கள். மற்றும் முழங்கால்ககளை வெளியே காட்டுவது மிகவும் ஆபத்தானது. இது மிக மிக முக்கியமான சக்கரம் ஆகும் – நாபி சக்கரம் என்று அழைக்கபடுவது. இது நமது லக்ஷ்மி தத்துவத்திற்கும் தொடர்புடையது லக்ஷ்மி என்றால் பணத்தின் தெய்வம். இது நமக்குள் பல வழிகளில் வெளிப்படுத்தப்படுகிறது: நமது செரிமானம், எல்லாம். அது தவிர, முக்கிய விஷயம் என்னவென்றால், இது உங்கள் உடலுக்கு மிகவும் மாறுபட்ட வெளிப்பாட்டை அளிக்கிறது. இப்போது மிகவும் பேராசை கொண்ட ஒருவர் இருந்தால், அவர் முகத்தில் இருந்தே நீங்கள் அதை அறியலாம். மிகவும் பொறாமை கொண்ட ஒருவரை, அவர் முகத்தில் இருந்தே அறியலாம். மிகவும் தந்திரமான ஒருவரை, அவர் முகத்தில் இருந்தே அறியலாம்.

அதே போல், இந்த முதல் மையம் அது மிக மிக முக்கியமானது உங்களுக்குச் கூறினால் ஒருவேளை மிக அதிகமாக இருக்கலாம், ஆனால் அது மிகவும் முக்கியமானது. இது உங்கள் அப்பாவித்தனத்தின் மையம். இந்த அப்பாவித்தனம் எப்போதும் இருக்கிறது. அதை அழிக்க முடியாது, அது அழிக்க முடியாதது. நீங்கள் என்ன செய்தாலும், என்ன தவறு செய்தாலும், நீங்கள் எந்த ஒழுக்கக்கேடான காரியத்தைச் செய்தாலும், இந்த மையம் இருக்கும் மற்றும் அப்பாவித்தனம் இருக்கும். அது சில மேகங்களால் மூடப்பட்டிருக்கலாம் – அது வேறு ஆனால் இந்த மையத்தை யாராலும் அழிக்க முடியாது. இப்போது அப்பாவியான முகம், எப்போதும் மிகவும் அழகாக இருக்கும். நீங்கள் குழந்தைகளைப் பாருங்கள், குழந்தைகள் மீது உங்களுக்கு எவ்வளவு அன்பு கொண்டுள்ளீர்கள்! ஏனென்றால் அவர்கள் கள்ளம் கபடமற்ற முகங்களைக் கொண்டுள்ளனர். இந்த மையத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.

மேலும் இந்த மையம் சிதைந்து கெட்டுவிடும் அதேசமயம், நீங்கள் தந்திரமானவராக ஆவீர்கள் என்பது அல்ல, ஆனால் நீங்கள் உங்கள் கற்பை மதிக்காதபோது அது கெட்டுவிடும். அது மிக முக்கியமான விஷயம். நீங்கள் விரும்பும் எந்த ஃபேஷனையும் நீங்கள் செய்யலாம், ஆனால் உங்கள் கற்பு மிக முக்கியமானது – அதுவே உங்கள் சக்தி. உங்கள் கற்பை நீங்கள் மதிக்கிறீர்கள் என்றால், உங்களை யாராலும் அழிக்க முடியாது. அது மனிதர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி கற்பு மிக முக்கியமானது மற்றும் இந்த மையம் அதன் முடிவுகளைக் காட்டத் தொடங்கும். அப்பாவித்தனத்தால், உங்கள் முகமே மிகவும் அப்பாவியாக மாறும் மற்றும் அன்பாகவும், அன்பான குழந்தைகளைப் போல இருக்கும். தந்திர குணம் முகத்திலேயே தெரியும். குறைந்தபட்சம், என்னால் பார்க்க முடியும். பிறர் உங்களை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்துவதை, உங்களால் புரிந்து கொள்ள முடியும். உங்களை பயன்படுத்திக் கொள்வதும் தெரியும்.

ஆனால் இந்த மையம் சரியாக இருந்தால், நீங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவராகிறீர்கள். உங்கள் அப்பாவித்தனத்தை யாராலும் அழிக்க முடியாத அளவிற்கு நீங்கள் மிகவும் சக்திவாய்ந்தவராவீர்கள். மேலும் அந்த அழகுக்காக அது மிகவும் மதிக்கப்பட வேண்டும். நான் சில மிக அழகான பெண்களைப் பார்த்திருக்கிறேன் அவர்கள் மிக கள்ளம் கபடமற்றவர்களாக இருப்பார்கள் அவர்கள் வெளிப்புறத்தில் ஈர்க்கும் படி இல்லாமல் இருக்கலாம் ஆனால் முகம் மிகவும் அப்பாவிதனமாக இருக்கும். மிகவும் அப்பாவிதனமாகவும் அன்பாகவும் உங்கள் வயது எதுவாக இருந்தாலும் அது முக்கியமல்ல. ஆனால் நீங்கள் உங்களையே மதிக்கிறீர்கள். முதலில், நீங்கள் உங்களை மதிக்கவில்லை என்றால், வேறு யார் உங்களை மதிக்கப் போகிறார்கள்? மற்றொரு விஷயம் என்னவென்றால், இரண்டாவது சக்கரம் அதற்கு மேல், பச்சை நிறமாக இருப்பது. இது(அநாஹதா) சிவப்பு சக்கரம் ஆகும். இது உங்கள் இதயத்திற்காக.

அதை மைய இதயம் என்கிறோம். நீங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும்போது, ​​இது பிடிக்கிறது. மேலும் இந்த சக்கரம் ஒரு குணத்தைப் பெற்றுள்ளது அதன் மூலம், அது தேவதைகளை உருவாக்குகிறது. நீங்கள் அவற்றை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் – அவற்றை ஆன்டிபாடிகள்(நோய் எதிர்ப்பு சக்தி) என்று அழைக்கலாம். இந்த தேவதைகள் உங்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டவர்கள். அனைத்திற்கும். உங்களுக்கு ஏதேனும் நோய் இருந்தால் அதை எதிர்த்துப் போராடுவார்கள். உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அவர்கள் அதை எதிர்த்துப் போராடுவார்கள். உங்களுக்கு ஏதேனும் பயம் இருந்தால் – உதாரணத்திற்கு திடீரென்று நீங்கள் ஒரு நாய், புலி அல்லது ஏதாவது ஒன்றைப் பார்க்கிறீர்கள் என்றால் இந்த மையம் இப்படி துடிக்க ஆரம்பிக்கும். இந்த துடிப்பு நான் தேவதைகள் என்று அழைக்கும் இந்த மக்களிடையே ஒரு வகையான இயக்கத்தை உருவாக்குகிறது.

ஒரு ஆபத்து இருப்பதை இந்த தேவதைகள் அறிவார்கள் அவர்கள் உங்களைப் பாதுகாக்க முயற்சி செய்கிறார்கள். எனவே இந்த மையம் மிகவும் முக்கியமானது. உங்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும். இந்த மையம் ஆபத்தில் இருக்கும்போது, உங்கள் பாதுகாப்பு உணர்வு தடுமாற்றம் அடைகிறது நவீன காலம் பாதுகாப்பின்மையால் நிறைந்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு – பாதுகாப்பின்மை நிறைந்துள்ளது. அவர்கள் எப்போதும், “எனக்கு என்ன நடக்கும் என்று கடவுளுக்குத் தான் தெரியும். எனக்கு எதிராக என்ன நடக்கப் போகிறதோ” என்று உணர்கிறார்கள் இவை அனைத்தும் இந்த மையத்தை நம்பி இருக்கிறது. இதுவே அன்னையின் மையம் ஆகும். உங்கள் தாயின் இதயத்தின் அர்த்தத்தை நீங்கள் புரிந்து கொண்டால், அல்லது ஒரு தாயாக உங்கள் இதயத்தை புரிந்துக் கொண்டால் நீங்கள் அந்த பகுதியை புரிந்து கொண்டீர்கள் என்று பொருள். பின்னர் இந்த மையம் சரியாகிறது நீங்கள் பாதுகாப்பாக உணர்கிறீர்கள்.

உங்களுக்குள் நீங்கள் முற்றிலும் பாதுகாப்பான உணர்வுடன் இருக்க வேண்டும். இது ஒரு மிக முக்கியமான கருத்து ஆகும். இந்த நாட்களில் பெண்களுக்கு அதிகமாக மார்பக புற்றுநோய்கள் இருப்பதை நான் காண்கிறேன். அதற்கும் இந்த மையம்தான் காரணம். ஏன்? ஏனென்றால் கணவர் மிகவும் ஆதிக்கம் செலுத்தினால், மற்றும் மிகவும் கண்டிப்பாக இருந்தால், பெண்கள் இதை உருவாக்கி கொள்கிறார்கள். அமெரிக்காவில், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், பெண்கள் மிகவும் நன்றாக இருக்கும் இடத்தில், பல பெண்களுக்கு இந்த பிரச்சனை உள்ளது. என்னால் இதனை விளக்க முடியவில்லை. என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், இந்தியாவில் பெண்களுக்கு இல்லை – ஆச்சரியம்படும் வகையில்!

ஏனெனில் இந்தியாவில், குழந்தைகள் தான் தாயின் சக்தி. அவளுடைய சக்தி வேறு எதிலும் இல்லை, அவளுடைய குழந்தைகளிடம் உள்ளது. மேலும் தன் பிள்ளைகள் சரியான கல்வியைப் பெறுவதை அவள் பார்த்துக்கொள்வாள். அவர்கள் எதற்கும் நன்றாக வளர்க்கப்படுகிறார்கள், அவள் தன் ஆபரணங்களை விற்று எல்லாவற்றையும் விற்க கூட செய்வாள் ஆனால் அவர்கள் நன்றாகப் படிக்கிறார்களா என்று பார்த்துக் கொள்வார். எல்லாவற்றையும் விட அவள் அவர்களை முதலில் கவனிப்பாள், அவள் தாயாக இருக்கும்போது. அதற்காக நீங்கள் உங்கள் தொழிலை விட்டுவிட வேண்டும் என்று அர்த்தமல்ல. நீங்கள் வெளியே செல்லவே கூடாது என்று அர்த்தம் இல்லை ஆனால் நீங்கள் உங்கள் பிள்ளைகள் மீது முழு கவனம் செலுத்த வேண்டும் – மிக முக்கியமானது. அதன் விளைவை இன்று நான் காட்டுகிறேன்: அனைத்து மென்பொருள் கலைஞர்களும் இந்தியாவில் இருந்து வருகிறார்கள். ஏன்? ஏன் இங்கிலாந்திலிருந்து வரவில்லை?

ஏன் மற்ற நாடுகளில் இருந்து வரவில்லை? அவர்கள் இவ்வளவு வளர்ச்சியடைந்தவர்கள் தானே. நான் இங்கு வந்ததும், ஆச்சரியமடைந்தேன். என் சீடர்கள் பலர் அவர்கள் படிப்பைப் பற்றி கவலைப்படவே இல்லை. அவர்கள், “நாங்கள் குப்பைகளை சுத்தம் செய்பவர்களாக இருக்க விரும்புகிறோம்.” என்று சொன்னார்கள். நான் “ஏன்?” என்றேன் “ஏனென்றால், அந்த வழியில் நிறைய பணம் பெறலாம்.” ஆனால் ஒரு மாணவராக இருந்தால்? நீங்கள் பட்டதாரியாக இருந்தாலும் உங்களுக்கு அதிக பணம் கிடைக்காது.”

“உன் கண்ணியம் உனக்கு புரியவில்லை.” என்று நான் கூறினேன் உங்கள் சிந்தனையிலும் புரிதலிலும் நீங்கள் முன்னேற வேண்டும் என்று உங்களுக்கு புரியவில்லை.” அவர்கள், “இல்லை, நாங்கள் பணம் கிடைக்கும் இடத்தில் ஏதாவது செய்ய விரும்புகிறோம். எங்களுக்குப் பணம் தரக்கூடிய எதையும் நாம் செய்வோம்.” என்றனர். “அது உங்களுக்கு பணத்தைக் கொடுக்கும்” என்றேன். “ஆனால் அது உங்களுக்கு கல்வியையும் செறிவையும் அளிக்காது.” உங்களிடம் இருக்க வேண்டிய முக்கியமான விஷயம் அதுதான் – உங்கள் செறிவு. இந்த செறிவு வரவில்லை என்றால், பின்னர் உங்களால் எதையும் செய்ய முடியாது. “கடவுளுக்கு நன்றி!

நீங்கள் கொஞ்சம் கல்வியில் ஈடுபடுவது நல்லது.” என்று அவர்களிடம் கூறினேன் அவர்கள் அனைவரும் நல்ல கல்லூரிகள், பள்ளிகளில் சேர்க்கை பெற்றனர். இப்போது அவர்கள் நன்றாக இருக்கிறார்கள். பரவாயில்லை. நீங்கள் பின்னர் சம்பாதிக்கலாம். பணம் எல்லாம் இல்லை. நீங்கள் கொஞ்சம் குறைவாக சம்பாதிக்கலாம் ஆனால் குறைந்த பட்சம் உங்களுக்கு கல்வியறிவு உள்ளது. இப்போது அமெரிக்காவில் கல்வி பற்றாக்குறை உள்ளது. உங்கள் மத்தியில். முதலாவதாக, கல்வி மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது மற்றபடி இடம் கிடைக்கும் பள்ளிகள் நல்லதாக இல்லை எனவே, நாம் எதைக் காண்கிறோம் என்றால், சிறந்த தச்சர்கள் இருப்பதால், நாம் சிறந்த ஜன்னல்களை பெற முடியும், ஆனால் கல்வி இல்லை.

எனவே, இந்தியாவில் இருந்து மென்பொருள் பணிக்காக ஆட்கள் குவிந்து வருகின்றனர் ஏனெனில் செறிவு போய்விட்டது. எனவே இந்த செறிவு சக்தி தாயிடமிருந்து குழந்தைகளுக்கு வருகிறது. மற்றும் அவர்கள் மிகவும் ஒருமுகப்படுத்தப்பட்ட மனம் கொண்டவர்கள். அந்த செறிவு இருப்பது மிகவும் முக்கியம் மற்றும் ஒரு தாயாக நம்பிக்கையும் முக்கியம். பலருக்கு, குறிப்பாக பெண்களுக்கு ஏன் இந்த மார்பகப் புற்றுநோய் வருகிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் பாதுகாப்பற்றவர்களாக இருக்கின்றனர். ஒரு கணவனால் உங்களை பாதுகாப்பற்றவராக மாற்ற முடியாது – உங்களுக்கு குழந்தைகள் இருந்தால். மற்றும் உங்கள் குழந்தைகள் உங்களுக்கு ஆதரவாக இருந்தால். நீங்கள் தனியாக இருந்தால் கூட, உங்கள் தாயின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். உங்களை கவனித்துக் கொள்ளும் அத்தகைய தாய்மார்கள் இருந்தால், எப்போதும் உங்களை ஆதரிப்பவர்களாக, மிக முக்கியமான அந்த பாதுகாப்பை உங்களுக்கு வழங்கும் இந்த ஆன்டிபாடிகளுக்காக(எதிர்ப்பு சக்திக்கு).

புற்றுநோய் போன்ற இந்த நோய்கள் அனைத்தும் நமக்குள் ஆன்டிபாடிகள் இல்லாததால் ஏற்படுகிறது. எனவே இந்த ஆன்டிபாடிகளை சிறிய சிறிய தேவதைகள் என்று அழைக்கலாம் எது உங்களைக் கவனித்துக்கொள்கிறது, எது உங்களைப் பற்றி கவலைப்படுகிறது இது உங்களுக்குள் இருக்கும் பொக்கிஷம் ஆகும் இதனை நாம் தவறாக பயன்படுத்தக் கூடாது. உங்கள் பாதுகாப்பு யாருக்கும் சவால் விடக்கூடாது. இதுதான், அதனால்தான் சொன்னேன், இது மிக மிக முக்கியமான மையம் என்று. அது இதய சக்கரம் என்று நீங்கள் என்ன அழைக்கும் சக்கரம். இப்போது சகஜ யோகா இல்லாமல் வெளியே, இதயத்தின் உறுதியை எப்படி அடைவது என்று தெரியவில்லை. மக்கள் கோபப்படுவதனால் இதயம் பலவீனமாகிறது. மிகவும் கோப குணம் கொண்டவர்கள், அவர்களுக்கு இதயத்தில் பிரச்சினைகள் இருக்கும். மேலும் அவர்களுக்கு மாரடைப்பு வருவதை நான் பார்த்திருக்கிறேன் மற்றும் அனைத்து வகையான இதய பிரச்சனைகளும் வரும் இந்த சக்கரம் ஆபத்தில் இருப்பதனால் – இதய சக்கரம். அதனால், ஒரு பக்கம் பாதுகாப்பின்மை, இன்னொரு பக்கம் மாரடைப்பு.

கோபம் கொள்வது மிகவும் தவறு. கோபம் கொள்வது உங்களையே முற்றிலும் அழித்துக் கொள்வது ஆகும் – அது சுய அழிவு. ஆனால் மக்களிடம் சொன்னால் மட்டும் அது நடக்காது. நீங்கள் ஆத்ம விழிப்புணர்வு கொடுக்க வேண்டும், ஆத்ம விழிப்புணர்வு வேண்டும், இதன் மூலம் நீங்கள் முற்றிலும் அமைதியானவராகவும், முற்றிலும் அமைதியாகவும் ஆகிவிடுவீர்கள். பிறகு கடைசி சக்கரம் இதுதான், விஷுத்தி சக்கரம் கடைசியில் உள்ளது. இந்த சக்கரம், விஷுத்தி, இங்கே உள்ளது – அது முக்கியமானது. இது பல விஷயங்களால் கெட்டுப் போகிறது. நீங்கள் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், நீங்கள் உங்கள் நாக்கால் ஆக்ரோஷமாக இருந்தால், அமெரிக்காவைப் போல – அங்கே அவர்கள் மிகவும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள், நான் ஆச்சரியப்பட்டேன். எல்லா நேரங்களிலும் அவர்கள் முட்டாள்தனமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் அவை எனக்கு புரிய கூட இல்லை. இவை அனைத்தும் இந்த சிக்கலை ஏற்படுத்துகின்றன.

மேலும் இது எந்த வரம்புக்கும் செல்லலாம். ஏனெனில் இது உங்களின் 16… உங்களின் 16… உறுப்புகள் என்று கூற வேண்டும், இல்லையா? இது உங்கள் கண்களை கட்டுப்படுத்துகிறது, அது உங்கள் மூக்கைக் கட்டுப்படுத்துகிறது, அது உங்கள் நாக்கைக் கட்டுப்படுத்துகிறது, அது உங்கள் பற்களைக் கட்டுப்படுத்துகிறது, உங்கள் காதுகளைக் கட்டுப்படுத்துகிறது, அனைத்தும் கட்டுப்படுத்தப்படுகின்றன, 16 விஷயங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன இந்த விஷுத்தி சக்கரத்தால். இருபுறமும் மிக முக்கியமான பெரும் சக்கரங்கள் உள்ளன அவை நம்மையும். முழு உலகையும் ஆட்சி செய்கின்றன எனலாம் இந்த இரண்டு சக்கரங்களும் நம் பக்கவாட்டில் உள்ளன. அவை. அவற்றை நாம் எப்படி அழைக்கிறோம் என்றால்… எனக்கு வேறு இந்திய பெயர்கள் தேவையில்லை. ஆனால் அவை மிக முக்கியமான சக்கரங்கள், இந்த இரண்டும். நீங்கள் அவற்றை வெளிப்படுத்தும்போது, ​​​​இவற்றில் உங்களுக்கு சிக்கல்கள் வரும். எனவே அவை வெளிப்படுத்தப்படக்கூடாது.

நீங்கள் சிறிய சட்டைகைகளை வைத்த்துக் கொள்ளலாம். ஆனால் அவற்றை ஒருபோதும் வெளிப்படுத்த வேண்டாம். பின்னர் உங்களுக்கு எந்த பிரச்சனையும், எந்த பிரச்சனையும் வரலாம். எந்த வகையான பிரச்சனையும், இந்த சக்கரத்துடன் இணைந்து. என்னை மன்னிக்கவும், நான் உங்களை எச்சரிக்க வேண்டும். பரவாயில்லை. ஆனால் அது இப்போது ஒரு ஃபேஷனாக இருக்கிறது. வெளியே காட்ட வேண்டிய அவசியம் என்ன? ஆண்களை மகிழ்விக்கவா? நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?

ஆண்களைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை காட்ட வேண்டும்? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பெண்கள் தான் சக்தி, அவர்கள் சக்தி ஆவர். நீங்கள் ஏன் ஆண்களை திருப்திப்படுத்த முயற்சிக்க வேண்டும்? ஏன் உங்களைப் பற்றிய இந்த வகையான ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்க வேண்டும்? எல்லா நேரமும் ஆண்களை மகிழ்விக்க முயற்சிப்பது! அவர்கள் மிகவும் வேடிக்கையானவர்கள், நான் உங்களுக்கு சொல்கிறேன். நேசத்தைக் கொன்றது இதுதான். ஒரு மனிதன் காதலில் விழுவதைப் பாருங்கள் இதைச் சொல்வதற்கு வருந்துகிறேன் – உங்கள் தலை அலங்காரத்துடன். தலை அலங்காரம் உள்ளது, ஒரு குறிப்பிட்ட தலை அலங்காரம் உள்ளது, அதனால் திரு.

X அந்த தலை அலங்காரம் மீது காதல் கொள்கிறார். ஆனால் பின்னர் அவள் சிகையலங்கார நிபுணரிடம் சென்று, தலை அலங்காரத்தை மாற்றிக் கொள்கிறாள். அது முடிந்துவிட்டது, காதல் முடிந்தது. அவர்கள் மிகவும் மேலோட்டமானவர்கள். அவர்கள் மிகவும் மேலோட்டமானவர்களாக இருக்கின்றனர். உங்கள் முடி உடைக்கு மயங்கலாம். மேலும் பெண்கள் மிகவும் ஏமாற்றமடைகின்றனர் ஆண்கள் அவர்களை நடத்தும் விதம் மற்றும் நடந்து கொள்ளும் விதத்தினால். எனவே, நான் என்ன பரிந்துரைக்கிறேன் என்றால், ஆண்களைப் பிரியப்படுத்த முயற்சிக்கக் கூடாது என்பது மிகவும் முக்கியம். உங்கள் சுயமரியாதையில் நீங்கள் நீங்களே இருங்கள். நீங்கள் பெண்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுக்கு சிறப்பு குணங்கள் உள்ளன.

உங்கள் சொந்த கண்ணியத்தில் நில்லுங்கள். உங்கள் சொந்த சக்தியில் நில்லுங்கள். மேலும் இது நடக்கும் போது ஆண்களை விட பெண்களுக்கு அதிக சக்தி கிடைக்கிறது. மிகவும் ஆச்சரியமானது. மேலும் இது பெண்களுக்கு மிகவும் அழகாக வேலை செய்கிறது. மற்றும் அது நடக்க வேண்டும். இப்போது, ​​உதாரணமாக, நீங்கள் நீங்களே சிகையலங்கார நிபுணர் அல்லது நீங்கள் எதுவாக இருந்தாலும், நீங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமாக மாறுகிறீர்கள். நீங்கள் ஒரு இசைக்கலைஞராக இருந்தால், நீங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருப்பீர்கள். நீங்கள் எதுவாக இருந்தாலும், நீங்கள் எந்தத் தொழிலைப் பின்பற்றினாலும், இந்த விஷயம் உங்களுக்கு நிகழும்போது நீங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருக்கிறீர்கள், ஏனென்றால் உங்கள் மையங்கள் அனைத்தும் சரிசெய்யப்பட்டுவிட்டன. மேலும் தெய்வீக சக்தி உங்கள் மூலம் ஊற்றப்படுகிறது.

இதைத்தான் நீங்கள் அடைய வேண்டும், அதுதான் உங்களிடம் இருக்க வேண்டும் பின்னர் யாராலும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. அது மட்டுமின்றி, அது உயருகிறது. இது மிக முக்கியமான சக்கரம், இது பார்வை பிணைப்பிற்கு இடையே உள்ள அக்ஞா சக்கரம் என்று அழைக்கப்படுகிறது மேலும் அது திறக்கப்படாவிட்டால், அது மிக மிக சுருக்கமாக உள்ளது அது திறக்கவில்லை என்றால் குண்டலினி கடந்து செல்ல முடியாது. இப்போது நாம் சிலுவையில் அறைந்த இயேசு கிறிஸ்துவின் சக்கரம் இதுதான். இப்போது அவர் என்ன செய்தார், முதலில் மன்னிப்பு கொடுத்தார் அவரை சித்திரவதை செய்ய முயற்சித்த மற்றும் சிலுவையில் அறைந்த அனைத்து மக்களுக்கும். எனவே ஒரே வழி – நீங்கள் மக்களை மன்னித்தால் மட்டுமே அது திறக்கும். நீங்கள் மன்னிக்க வேண்டும். அவரை நினைத்து பயனில்லை. யாரோ உங்களை காயப்படுத்தியிருக்கிறார்கள், சரி. அதனால் என்ன?

இது முடிந்தது. அது இன்று இல்லை. எது நடந்ததோ அது நடந்து முடிந்துவிட்டது. அதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? ஆனால் நீங்கள் மன்னிக்கவில்லை என்றால், எல்லா நேரத்திலும் நீங்கள் அதைப் பற்றி யோசித்து உங்களையே சித்திரவதை செய்து கொள்வீர்கள் ஒன்றுமே இல்லாத விஷயத்திற்காக. அதற்கு பதிலாக நீங்கள் மன்னியுங்கள். எல்லாவற்றையும் மன்னியுங்கள். மன்னிப்பது என்பது ஒரு சிறந்த குணம் அதன் மூலம், யாராலும் உங்களை சித்திரவதை செய்ய முடியாது, யாராலும் உங்களை தொந்தரவு செய்ய முடியாது ஏனென்றால் நீங்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை. மக்கள் என்னை மிகவும் தொந்தரவு செய்ய முயற்சிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது என்னை காயப்படுத்த எல்லா வகையான விஷயங்களையும் அவர்கள் அவ்வளவு செய்திருக்கிறார்கள். ஆனால் எப்படியோ, நான் அவர்களை மன்னிக்கிறேன்.

மேலும் அதனுடன் அது முடித்துவிட்டது. ஏனென்றால் நீங்கள் அவர்களை மன்னித்தவுடன், அவர்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள் என்பது உங்களுக்கு நினைவில் இருக்காது. நீங்கள் உங்களையே ஒருபோதும் சித்திரவதை செய்ய மாட்டீர்கள். ஆனால் நீங்கள் மன்னிக்கவில்லை என்றால், உங்களை நீங்களே சித்திரவதை செய்கிறீர்கள் “அவன் ஏன் இப்படி செய்தான்? அவள் ஏன் இப்படி செய்தாள்?” என்று எண்ணி.. ஒன்றுமில்லை – நீங்கள் மன்னியுங்கள். இயேசுவின் மிகப் பெரிய பரிசு – நீங்கள் அனைவரையும் மன்னிக்க வேண்டும் என்பது. அது உங்களுக்கு இங்கே ஒரு பெரிய அமைதியைத் தருகிறது. ஆனால் இந்த அமைதியும் மிக முக்கியமானது. உங்களுக்குள் அமைதி இல்லையென்றால், பின்னர் நீங்கள் மிக விரைவில் வயதாகிவிடுவீர்கள்.

பல இளம் பெண்கள் சுருக்கங்கள், கவலை, வருத்தம் போன்றவற்றுடன் பார்த்திருக்கிறேன். பதற்றம், அது, இது என்று எல்லா நேரத்திலும் எரிச்சல். காரணம் என்னவென்றால், அவர்கள் இன்னும் மன்னிக்கவில்லை அவர்களை தொந்தரவு செய்த மக்களை எனவே நான் சொன்னது போல் இந்த சாட்சி நிலையை உங்களால் வளர்க்க முடிந்தால், நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். நீங்கள் முழு விஷயத்திற்கும் ஒரு சாட்சியாக இருக்கிறீர்கள், இந்த மையம் திறக்கப்பட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அதன் மூலம் நீங்கள் எதிர்வினையாற்ற மாட்டீர்கள். நீங்கள் எதிர்வினையாற்ற மாட்டீர்கள். நீங்கள் பார்த்து, “சரி. இது அப்படித்தான், அதனால் இது அப்படித்தான்.” என்பீர்கள் மேலும் வாழ்க்கை நகைச்சுவை நிறைந்ததாக மாறும் மற்றும் நீங்கள் பார்க்கும் அபத்தமான எதையும் பார்த்து புன்னகைத்து சிரிக்கவும். இந்த முட்டாள்தனமான விஷயங்களைப் பற்றி சிந்திக்க உங்களுக்கு நேரமில்லை மக்கள் உங்களைப் பற்றி பேசுவதையும், அல்லது உங்களுக்கு தீங்கு செய்ய முயற்சி செய்வதையும் உங்களுக்கு பிரச்சனையை உருவாக்க முயற்சிப்பதையும் கண்டு நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட கூடாது. இப்போது அவர்கள்… இது நடந்தவுடன், மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நினைக்க மாட்டீர்கள். ஏனென்றால், நீங்கள் தெய்வீகத்துடன் ஒன்றாக இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஏனெனில், உங்கள் கைகளில் நுண்ணதிர்வுகள் இருப்பதால், நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளீர்கள், எனவே நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள். ஆனால் இந்த நம்பிக்கையுடன் நீங்கள் மற்றவர்களை ஒடுக்க மாட்டீர்கள். இது அன்புடன் கூடிய நம்பிக்கை. நான் அதை உணர்ச்சிகரமான புத்திசாலித்தனம் என்று அழைக்கிறேன். நான் அதை உணர்ச்சிசார்ந்த நுண்ணறிவு என்று அழைக்கிறேன். பல குழந்தைகள் அதனுடன் பிறக்கின்றனர், ஆனால் அவர்களுக்கு வேறு ஏதாவது கற்பிக்கப்படுகிறது, அதனால் அவர்கள் அதைச் செய்கிறார்கள். நான் என் சொந்த பூட்டனை குறிப்பிடுவேன், அவன் இதனுடன் பிறந்தவன்.

நாங்கள் அமெரிக்காவை அடைந்தவுடன், அவர் எங்களுடன் தான் ஆறு மாதங்கள் இருந்தான், அவன் ஒரு சிறு பையன், ஒரு, 7-8 மாதங்களுக்குப் பிறகு நாங்கள் அமெரிக்கா சென்றோம், உடனே ரிமோட் கண்ட்ரோலை எடுத்து வந்து என் கணவரிடம் கொடுத்தான். ஏனென்றால் அவர் எப்போதும் தொலைக்காட்சியைப் பார்த்து கொண்டிருப்பார். உடனடியாக. பிறகு செய்தித்தாளை எடுத்து வந்து எனக்கு படிக்க கொடுத்தான். என்னிடம் அவர் ஒரு மலரையும் கொண்டு வந்தான். எனவே, அவனது உணர்ச்சிசார் நுண்ணறிவால் ஒருவர் எதை விரும்புகிறார், எதை வைத்திருக்கிறார் என்பதை அவன் அறிவான். நீங்கள் வீட்டிற்கு வந்தாலோ அல்லது யாராவது எங்கள் வீட்டுக்கு வந்தால், அவன் உடனடியாக பொருட்களை கொண்டு வருவான் சாப்பிட அல்லது அவர்களை மகிழ்விக்க அவர்களுக்கு கொடுப்பான் எப்போதும். இந்த பொழுதுபோக்கு விஷயங்களும், அவன் நடனமாடத் தொடங்குவான், அவன் உங்களுக்கு நடனமாடி காட்டத் தொடங்குவான். நீங்கள் அதை பார்த்தீர்களா? மிகவும் கவனமாக இருப்பான் தன் அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்று விலங்குகளுடனும், அனைவருடனும், மிகவும் நட்பாக இருப்பான்.

அதுதான் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய உணர்வுசார் நுண்ணறிவு. மேலும் அதை சார்ந்து இருங்கள். அது உங்களுக்கு உதவும். நீங்கள் நிறைய நண்பர்களைப் பெறுவீர்கள், நிறையப் பெறுவீர்கள் நண்பர்கள் மட்டுமல்ல, உங்களுக்கு உங்கள் வேலையில் உதவுபவர்களும் என்று சொல்ல வேண்டும் அவர்கள் உங்களுக்கு எல்லாவற்றிலும் சிறந்த உதவியை வழங்குவார்கள். உணர்வுபூர்வமாக புத்திசாலியாக இருப்பது மிக மிக பெரிய திறன் ஆகும். நீங்கள் உணர்ச்சிவசப்பட்டால், மக்கள் உங்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும். அதில் என்ன தீங்கு? ஆனால் நீங்கள் உங்களையேப் பயன்படுத்திக் கொள்ளாதீர்கள் கொடூரமாக அல்லது மற்றவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதன் மூலம். ஒருவர் உங்களிடம் இனிமையாக இருந்த அந்த நாளை நினைவில் வைத்திருங்கள் அந்த நேரத்தை – யாரோ ஒருவர் மிகவும் இனிமையாக இருந்த அந்த தருணத்தை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களுக்கு மிகவும் நல்லது செய்து, மிகவும் அன்பாக, மிகவும் உதவியாக இருந்ததை நினைவில் கொள்ளுங்கள்! அந்த எல்லா தருணங்களையும் நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் அவமதிக்கப்பட்ட தருணங்களை அல்ல நீங்கள் துன்பப்பட்ட நேரத்தை அல்ல ஆனால் யாரோ ஒருவர் உங்களுக்கு அன்பைக் கொடுத்த நேரம், யாரோ ஒருவர் உங்களிடம் அன்புடன் பேசியதை.. நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் அத்தகைய நறுமணம் உங்களுக்குள் இருந்து வீச ஆரம்பிக்கும். பலருக்கு இந்த ஆத்ம விழிப்புணர்வு கிடைத்துள்ளது அவர்கள் சண்டையிடுதல் போன்ற அனைத்து முட்டாள்தனங்களையும் மறந்துவிட்டார்கள். இந்தியாவில் சில நேரங்களில் ஆயிரக்கணக்கானோர் மக்கள் வருவார்கள் அவர்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்து வருகிறார்கள் என்பதை அறிந்து நான் ஆச்சரியப்பட்டேன் மேலும் சகஜ யோகா 86 நாடுகளில் செயல்படுகிறது, அவர்கள் ஒருபோதும் சச்சரவிட மாட்டார்கள், சண்டையிட மாட்டார்கள். யாரும் சச்சரவிடுவதையோ, சண்டையிடுவதையோ நான் கேட்டதில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் விளையாட்டாக கால்களை இழுக்கிறார்கள், அவர்கள் மிகவும் நகைச்சுவையானவர்கள். அதைத்தான் செய்வார்கள். இப்போது இருக்கும் மற்றொரு மோகம் – ஏன் என்று தெரியவில்லை – நாம் மிக மிக ஒல்லியாக இருக்க வேண்டும் என்பது, மெல்லிய தன்மை மிகவும் கவர்ச்சியானது என்பது – அது அப்படி இல்லை. நீங்கள் சில சமயங்களில் தானாகவே மெலிந்து போவதைப் பாருங்கள் உங்கள் கல்லீரல் செயலிழந்தால் இது மிகவும் ஆபத்தான விஷயம், மோசமான கல்லீரல். நான் ஒப்புக்கொள்கிறேன், நீங்கள் பருமனாக இருக்கக்கூடாது.

நீங்கள் மிகவும் பருமனாக மாறினால், நீங்கள் வேறு ஏதாவது ஒன்றை(பிரச்சனையை) உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் இயற்கையாகவே ஒல்லியாக இருந்தால் புரிந்து கொள்ளுங்கள் கல்லீரல் ஒழுங்கற்றதாக இருக்க வேண்டும் என்று. இப்போது இந்த கல்லீரல் செயலிழந்த நிலையில் இருக்கும் போது, அது எத்தனை பிரச்சனைகளை கொடுக்க முடியும், அது உங்களுக்கு தெரியாது. முதலில் இது ஆஸ்துமாவைக் கொடுக்கலாம். இது உங்களுக்கு ஒரு… அது வலது பக்கம் நகர்ந்தால், அது உங்களுக்கு நீரிழிவு நோயை உண்டாக்கலாம். அது இங்கே கீழ்நோக்கி நகர்ந்தால், இந்த வெப்பத்தை உங்களுக்குத் தரலாம். அது உங்களுக்கு மண்ணீரலையும் பிரச்சனையில் சிக்க வைக்கலாம் அது இறுதியில் உங்களுக்கு புற்றுநோயைக் கொடுக்கலாம். இரத்த புற்றுநோய், அது உங்களுக்கு இரத்த புற்றுநோயை உண்டாக்கலாம். பிறகு அது கருப்பைக்கு சென்றாலும், அங்கேயும் அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். கல்லீரலில் இருந்து இந்த வெப்பம் எல்லா இடங்களுக்கும் கடந்து சென்றால் மற்றும் அனைத்து பிரச்சனைகளையும் உருவாக்குகிறது.

அது மட்டும் அல்ல, ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு அது உங்களுக்கு ஒரு பெரிய மாரடைப்பையும் கொடுக்கலாம். நீங்கள் இளமையாக இருந்தால் மற்றும் அதிகமாக குடிப்பவராக இருந்தால் மற்றும் டென்னிஸ் போன்றவற்றை விளையாடினாலும் பின்னர் திடீரென்று இதயம் செயலிழக்கிறது. அப்படித்தான் பல மாரடைப்புகள் வருகின்றன. எனவே உங்கள் ஆரோக்கியத்தை உங்களுக்குள் பாதுகாக்க, முதலில் நீங்கள் என்ன, உங்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் இந்த பிரச்சனைகள் உள்ளன என்று. பின்னர் வெளியில் ஏன் பிரச்சினைகள் உள்ளன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தெய்வீகமாக மாறினால் இதைப் புரிந்துகொள்வது மிகவும் எளிது. இந்த தெய்வீக ஒளி உங்களுக்கு எல்லாவற்றையும் பற்றிய அனைத்து புரிதலையும் கொடுக்கும். எனக்குத் தெரியவில்லை, நான் அதைப் பற்றி பல முறை பேசியிருக்கிறேன் ஆனால் அழகுடன் ஒருபோதும் தொடர்பு படுத்தவில்லை. ஆனால் அழகு நிச்சயமாக உங்களுக்கு உள்ளே இருக்கிறது, தெரியுமா?

எல்லாம் உள்ளே இருக்கிறது, அது வெளியில் இல்லை. ஆனால் நான் உங்களை இப்படி நம்ப வைக்க முடியாது நீங்கள் ஆத்ம விழிப்புணர்வு பெரும் வரை. வெளியே மிகவும் அழகாக இருக்கும் சிலர் இருக்கிறார்கள் ஆனால் உள்ளே பாம்புகள் போல இருப்பார்கள். அப்படி இருக்கலாம். எனவே உள்ளத்தில் அழகு இருப்பதுதான் சிறந்த விஷயம். அது மக்களை ஈர்க்கிறது. என்னைப் பாருங்கள், எனக்கு நிறைய சீடர்கள் உள்ளனர், இப்போது உலகம் முழுவதும் பலர் உள்ளனர். ஆனால் இப்போது நான் அவர்களுக்கு என்ன செய்தேன்? ஒன்றுமில்லை. நான் அவர்களை இதன் மூலம் தெய்வீகத்துடன் இணைத்துள்ளேன்.

உங்கள் மூளைக்குள் 1000 இதழ்கள் உள்ளன. நீங்கள் தெய்வீகத்துடன் ஒன்றாகியவுடன் அவை ஞான ஒளி பெறுகின்றன. மேலும் அந்த தெய்வீக சக்தி உங்கள் மூலம் பாய ஆரம்பிக்கிறது. நீங்கள் தெய்வீகமாக மாறுகிறீர்கள். பின்னர் உங்களுக்கு, நீங்கள் என்ன அணிய வேண்டும் என்று தெரியும். எப்படி நடந்துகொள்வது, எல்லாம் தானாகவே நடக்கும். இது தன்னிச்சையானது. “இதைச் செய், அதை செய்” என்று நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை அது செயல் புரிகிறது. நீங்கள் உங்கள் சொந்த குருவாகிறீர்கள். நான் உங்களுக்கு எதுவும் சொல்ல வேண்டியதில்லை.

உங்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை நீங்கள் கண்டுபிடிக்கலாம். நான் சொல்வது நீண்ட ஆயுளுக்கு மட்டுமல்ல, ஆனால் நான் உலக அமைதிக்காக சொல்கிறேன். நீங்கள் அதை மக்களுக்கு பரப்ப விரும்புவீர்கள் உங்கள் முயற்சிகள் மூலம், உங்களது பல்வேறு கருத்துக்கள் மற்றும் படைப்பாற்றல் மூலம் உலக மக்கள் அனைவருக்கும். எனவே மனிதர்களால் உருவாக்கப்படும் பிரச்சனைகள் முக்கியமாக அவை தான் பிரச்சனைகள். மேலும் அவற்றை தீர்த்துவிடலாம். ஒரு மனிதன் உள்ளே மிகவும் அழகாக இருந்தால், வெளியேயும் அவர் அழகாக இருக்கிறார், மேலும் அவரால் ஒரு மிகவும் அழகான, அன்பான உலகை உருவாக்க முடியும். எனவே, நீங்கள் என்னிடம் சில கேள்விகளைக் கேட்கலாம். எரிக்? இங்கே வாருங்கள். சஹஜ யோகி: இந்த ஆண்டு ஆல்பர்ட் ஹாலுக்கு வந்த மக்களுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?

எரிக், நீங்கள் இங்கே வாருங்கள். பரவாயில்லை. சஹஜ யோகி: ஸ்ரீ மாதாஜி, இந்த ஆண்டு ஆல்பர்ட் ஹாலுக்கு வந்த மக்களுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? ஸ்ரீ மாதாஜி: நிச்சயமாக, ஏன் இல்லை? நான் மிக மிக மகிழ்ச்சியாக இருந்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மற்றபடியும் நான் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர்கள் வந்தாலும் வராவிட்டாலும் எனக்கு எந்த வித்தியாசமும் இல்லை. சஹஜ யோகி: நீங்கள் எப்படி அதனை உணருகிறீர்கள்? நீங்கள் எப்படி, இதை எப்படி உணருகிறீர்கள்?

ஸ்ரீ மாதாஜி: நான் இப்படித்தான் பிறந்தேன். நீங்கள் ஒரு மனிதர் என்பதை எப்படி உணருகிறீர்கள்? கேள்வி: இல்லை, நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதை… உங்களுக்குள் ஏற்பட்ட மாற்றத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதை எப்படி உணருகிறீர்கள்? இது உங்களுக்கு நடக்கிறது என்று உங்களுக்கு எப்படித் தெரிகிறது? சஹஜ யோகி: நீங்களா அல்லது ஸ்ரீ மாதாஜியா? கேள்வி: ஒருவர் எப்படி உணருகிறார்? சஹஜ யோகி: நாம் ஆத்ம விழிப்புணர்வு பெற்றுவிட்டோம் என்று எப்படி நாம் அறிவோம்? ஸ்ரீ மாதாஜி: ஆ! இது ஒரு நல்ல கேள்வி. உங்கள் கைகளில் இருந்து ஒரு குளிர்ந்த அல்லது சூடான காற்று வெளியே வரும் பொழுது உங்களுக்குத் தெரியும் சூடான காற்று ஏன் இருக்கிறது என்றால், நீங்கள் மன்னிக்கவில்லை என்றால், எதுவும் இருக்காது.

ஆனால் உங்கள் கைகளை இவ்வாறு வைத்தால், குளிர்ந்த காற்று உங்களுக்குள் வீச வேண்டும். இந்த குளிர் காற்றானது என்ன? நீங்கள் உணருவது, இதுவே பரிசுத்த ஆவியின் குளிர்ந்த காற்று ஆகும். மேலும் இது உங்கள் உச்சிக்குழி எலும்பு பகுதியில் இருந்து வெளியே வருகிறது. இது உங்களுடையது, என்னுடையது அல்ல. உங்களுடையது. அதை உங்களால் உணர முடியும். இதுவே முதல் அறிகுறி. பின்னர், உங்கள் கையால் செய்யக்கூடிய அற்புதங்களை நீங்கள் பார்க்கத் தொடங்குவீர்கள். முடி அலங்காரத்திற்கும், நான் கூற வேண்டும், ஆத்ம விழிப்புணர்வு பெற்ற பெண் ஒருவர் இருந்தால், கூந்தலை எப்படி வார வேண்டும் என்று அவருக்குத் தெரியும் ஏனென்றால் நீங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமாக மாறுகிறீர்கள்.

நீங்கள் ஒரு பாணியில் ஒட்டிக்கொள்ளாமல், அல்லது நீங்கள் யாரையும் பார்த்து அவர்களை போலவே செய்யாமல், உங்களுக்கென்று உங்கள் சொந்த பாணி இருக்கும். எல்லாவற்றிலும் உங்களுக்கென்று சொந்த பாணி இருக்கும். சுயமரியாதை. அது அடக்கி ஆட்கொள்ளும் சக்தி அல்ல. அது உங்களுக்குள் உள்ளது. அத்தகைய அமைதி மற்றும் அத்தகைய ஆனந்தம் – உங்களுக்குள் இருக்கிறது. இது மிகைப்படுத்துவதில்லை. மாறாக, அது மிகவும் பரவுகிறது. அதிகமாக (பரவுகிறது) மற்றவர்களை மிக உயர்ந்த மட்டத்தில் கைப்பற்றுகிறது. ஒரு சாதாரண மட்டத்திலோ அல்லது மக்கள் செய்ய முயற்சிக்கும் குறைந்த அளவுகளிலோ அல்ல.

இது மிக மிக தெய்வீகமானது மற்றும் மிகவும் அழகானது – நான் உங்களுக்கு சொல்கிறேன். கேள்வியை கேளுங்கள் உங்கள் எல்லா கேள்விகளுக்கும் நான் பதிலளித்துவிட்டேனா? அவர் என்ன சொன்னார்? சஹஜ யோகி: வேறு ஏதேனும் கேள்விகள் உள்ளதா? பெண்கள் மற்றும் இன்றிரவு இங்குள்ள மக்கள் ஆத்ம விழிப்புணர்வை அனுபவிக்க முடியுமா? சஹஜ யோகி: அவர்கள் அதை அனுபவிக்க முடியுமா? நீங்கள் எங்களுக்கு காட்ட முடியுமா? முயற்சி செய்ய வேண்டுமா? நல்லது. அது மிகவும் நல்லது.

நீங்கள் உண்மையிலேயே உண்மையான வல்லுநர்களாக மாறுவீர்கள். திரு. எம்ரோ மிகவும் அன்பாக அதை அறிவித்துள்ளார். ஆனால் இதை பெற்றவர்கள் பலர் உள்ளனர் ஆனால் அவர்கள் வெட்கப்பட்டு அமைதியாக இருந்தனர். அவர்கள் அதை பகிர்ந்து கொள்ளவும் விரும்பவில்லை, ஏனென்றால் மக்கள் தங்களை பைத்தியம் என்று நினைப்பார்கள் என்று நினைத்தனர் அவர்களிடம் ஏதோ தவறு இருக்கிறது என்று. எனவே இது மிகவும் எளிமையானது. இது மிகவும் எளிமையானது. நீங்கள் அனைவரும் அதைப் பெறலாம். காலணிகளை கழற்றலாமா? சஹஜ யோகி: தியானம் செய்வதற்கும் உள்ளே அந்த சக்திகளை உணரவும் (காலனியை) கழற்றுவது சிறந்தது பூமியில், தரையில் ஒரு நல்ல ஆதாரத்தைப் பெற முடியும்.

கேள்வி: எங்கள் காலுறைகளும்(socks) கழற்ற வேண்டுமா? சஹஜ யோகி: உங்கள் விருப்பப்படி செய்யலாம். உங்களுக்கு செளகரியமாக இருந்தால் உங்கள் காலுறைகளை( socks) கழற்றிக் கொள்ளுங்கள். ஸ்ரீ மாதாஜி: சாக்ஸ் இருக்கட்டும். அதனால் ஒன்றுமில்லை. சஹஜ யோகி: உங்கள் சௌகரியம் ஸ்ரீ மாதாஜி: பல பெண்கள் இருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஏனென்றால், பெண்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். அவர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள் – அவர்களுக்கு தங்கள் சக்திகளை பற்றி தெரியாது. நிச்சயமாக. இப்போது இரண்டு கால்களையும் தரையில் இப்படி வைத்துக் கொள்ளுங்கள் இரண்டு கால்களுக்கும் இடையில் சிறிது இடைவெளி இருக்கட்டும் உங்கள் இரு கைகளையும் என்னை நோக்கி வையுங்கள்.

இதனை பெறுவது உங்கள் உரிமை. எந்த கட்டாயமும் இல்லை, எதுவும் இல்லை. இதனைப் பெறுவது உங்கள் உரிமை, நீங்கள் அனைவரும் அதைப் பெறலாம். பிரச்சினைகள் இல்லை. நீங்கள் இதை உடனடியாக பெறலாம். நான் உங்களிடம் சொன்னது போல், நீங்கள் அனைவரையும் மன்னிக்க வேண்டும். எல்லாவற்றையும் மன்னியுங்கள், ஏனென்றால் அது கடந்துவிட்டது. மற்றும் முடிந்துவிட்டது. நாம் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும். எனவே, அனைவரையும் மன்னியுங்கள் மேலும் உங்களையே மன்னியுங்கள்.

நீங்கள் எதற்கும் குற்றவுணர்வு கொள்ளக்கூடாது, நீங்கள் எதற்கும் குற்ற உணர்வுடன் இருக்கக்கூடாது. அனைவரையும் மன்னியுங்கள், அது மிகவும் முக்கியம். உங்களுக்கு அனுபவம் கிடைக்க நீங்கள் மன்னிப்பது முக்கியம். நீங்கள் மன்னிக்கவில்லை என்றால், நீங்கள் சூடான காற்று வருவதை உணருவீர்கள். ஆனால் உங்களையும் மற்றவர்களையும் நீங்கள் மன்னித்தால், உங்கள் கைகளில் நல்ல குளிர்ந்த காற்று வீசும். இப்போது, ​​உங்கள் வலது கையை என்னை நோக்கி வைத்து பாருங்கள் உங்கள் இடது கையை உங்கள் உச்சிகுழி எலும்பு பகுதியின் மேல் வைத்து, இது உங்கள் குழந்தைப் பருவத்தில் மென்மையாக இருந்த அந்த எலும்பு. நீங்கள் உங்கள் தலையை குனிந்து நீங்களே பாருங்கள், குளிர்ந்த காற்று அல்லது சூடான காற்று வருகிறதா என்று, உங்களால் அதை காண முடியும் – ஒருவேளை பக்கங்களிலும் இருக்கலாம், ஆனால் அதை தலையின் மேல் வைக்க வேண்டாம், ஆனால் தலைக்கு மேல் வைக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக கையை இங்கும் அங்கும் நகர்த்தினால் போதும். உங்கள் வலது கையை என்னை நோக்கி வையுங்கள். அது சூடாக இருந்தால் நீங்கள் மன்னிக்கவில்லை என்று அர்த்தம் உங்களையோ அல்லது நீங்கள் மற்றவர்களையோ மன்னிக்கவில்லை.

எனவே, இப்போது உங்கள் இடது கையை என்னை நோக்கி வையுங்கள் மற்றும் உங்கள் வலது கையை உங்கள் தலையின் மேல் வைக்கவும். மீண்டும் வைத்து பார்க்கவும். உங்களையே சந்தேகிக்காதீர்கள். தயவு செய்து சந்தேகம் வேண்டாம், உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். இப்போது அது உயரும், உயரும். இன்னொரு முறை. வலது கையை என்னை நோக்கி வைக்கவும் உங்கள் இடது கையை என்னை நோக்கி வைத்து நீங்களே பாருங்கள். உங்கள் தலையை குனிந்து கண்களை மூடிக் கொள்ளுங்கள். தயவுசெய்து கண்களை மூடிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

இப்போது உங்கள் கைகளை இப்படி வையுங்கள். மற்றும் குளிர்ந்த காற்று அல்லது அனல் காற்றை உணர்ந்தவர்கள், இந்த விரல் நுனிகளில், அல்லது உள்ளங்கையில், அல்லது உச்சிக்குழி எலும்பு வழியாக உணர்ந்தவர்கள், உங்கள் கைகளை உயர்த்தவும். ஓ, இன்னும் இல்லையா? ஆம், அது வேலை செய்யும். பெண்: என் தலையிலும் கைகளிலும் குளிர்ச்சியாக உணர்கிறேன். ஸ்ரீ மாதாஜி: நீங்கள் கைகளில் உணர்ந்து, இங்கே உணரவில்லையா? சஹஜ யோகி: தலையில் குளிர்ச்சியாக உணர்கிறார் ஸ்ரீ மாதாஜி ஸ்ரீ மாதாஜி: பிறகு பரவாயில்லை, ஏனென்றால் உங்கள் இந்த மையம் கொஞ்சம் சிக்கலில் உள்ளது. அது சரியாகிவிடும். நீங்கள் அதை உங்கள் தலையில் உணர்ந்திருந்தால் பரவாயில்லை, நாம் அதைச் சரிசெய்வோம். உங்களுக்கு எப்படி இருந்தது?

பெண்: சூடாக. ஸ்ரீ மாதாஜி: அவர் என்ன சொல்கிறார்? சஹஜ யோகி: சூடாக இருக்கிறதா? சூடாக வீசுகிறதா? பெண்: சூடாக. சஹஜ யோகி: சூடாக இருக்கிறது. ஸ்ரீ மாதாஜி: கைகளில் சூடாக இருக்கிறதா? ஸ்ரீ மாதாஜி: சரி, தயவு செய்து மன்னியுங்கள். மன்னியுங்கள். இப்போது பாருங்கள்.

தர்க்கம் இப்படி இருக்கிறது: அதாவது, நீங்கள் மன்னித்தாலும் மன்னிக்காவிட்டாலும், நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஒன்றுமில்லை. மன்னிக்காமல் இருப்பதால், உங்களை நீங்களே சித்திரவதை செய்து கொள்கிறீர்கள். கருத்தை பார்க்கிறீர்களா? இப்போது, ​​நீங்கள் தயவுசெய்து மன்னியுங்கள், உண்மையில் மன்னியுங்கள். உங்கள் கைகளை என்னை நோக்கி வையுங்கள். இப்போது குளிர்ச்சியா உள்ளதா? பெண்: இல்லை. ஸ்ரீ மாதாஜி: இன்னும் இல்லையா? நான் உங்கள் மீது வேலை செய்ய வேண்டும்.

உங்கள் மன்னிப்புக்காக நான் வேலை செய்ய வேண்டும். அங்கு யாராவது.. நீங்கள் அனைவரும் உணர்ந்தீர்களா? சரி. எனவே, வாருங்கள். நாற்காலியை அகற்றவும். உட்காருங்கள். பெண்: நான் எங்கே உட்கார வேண்டும்? இங்கே? உங்களால் உட்கார முடியுமா? பெண்: நான் உட்காரலாம்… உங்கள் வலது கையை என்னை நோக்கி வைக்கவும்.

பூமியில் இடது கையை வைக்கவும். இப்போது மன்னிக்கவும். கல்லீரல். உங்களுக்கு கல்லீரல் பிரச்சனை உள்ளது. பெண்: எனக்கு இருக்கிறதா? ஸ்ரீ மாதாஜி: கொஞ்சம். நீங்கள் அதிகமாக சிந்திக்கிறீர்கள். பெண்: நான் மிகவும் கடினமாக உழைக்கிறேன். நீங்கள் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் நினைப்பவரா? நீங்கள் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் நினைப்பவரா?

சஹஜ யோகி: திட்டமிடுதல், நிறைய வேலை செய்தல். பெண்: இல்லை. கடந்த காலத்தை நினைக்கும் பலருடன் வாழ்கிறேன் ஆனால் நான் எதிர்காலத்தை சார்ந்தவர் அல்ல. மன்னிக்கவும், தயவுசெய்து மன்னிக்கவும். பெண்: கஷ்டமாக இருக்கிறது. சஹஜ யோகி: அதைச் சொல்லுங்கள். “நான் அனைவரையும் மன்னிக்கிறேன்” என்று கூறுங்கள். பெண்: நான் தயாரா என்று எனக்குத் தெரியவில்லை. சஹஜ யோகி: தயவுசெய்து சொல்லுங்கள். பிறகு செய்துவிடுவீர்கள்.

அது எளிது. சஹஜ யோகி: அவர் இன்னும் தயாராகவில்லை என்கிறார். நீங்கள் முழுவதும் தயாராக உள்ளீர்கள். இப்போது உங்களுக்குள் இந்த தயக்கம் வேண்டாம். இல்லாவிட்டால் நீங்கள் இங்கு வந்திருக்க மாட்டீர்கள். சரியா? பெண்: சரி, நான் மன்னிக்கிறேன்… நீங்கள் முழுவதும் தயாராக உள்ளீர்கள். பெண்: நான் மன்னிக்கிறேன். மன்னிக்கவும், நல்லது. மிக நல்லது.

குளிர்ச்சியாக இருக்கிறதா? பெண்: இன்னும் சூடாக இருக்கிறது, இன்னும் சூடாக இருக்கிறது! இன்னும் சூடாக இருக்கிறதா? சஹஜ யோகி: “நான் அனைவரையும் மன்னிக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே இருங்கள் – நீங்கள் அதை மகிழ்ந்து அனுபவிப்பீர்கள். சஹஜ யோகி: உள்ளே என்று சொல்லுங்கள். ஆமாம், உள்ளே கல்லீரல் இப்போது நன்றாக இருக்கிறதா? பெண்: இப்போது நன்றாக இருக்கிறது, ஆம், குளிர்ச்சியாக இருக்கிறது. அவ்வளவு சூடாக இல்லை, சூடாக இல்லை. இது ஒரு அனுபவம். கூறுவது மட்டுமல்ல இது ஒரு அனுபவம்.

அது உண்மை. இப்போது அவள் உணர்கிறாள். இப்போது நன்றாக இருக்கிறது, மிகவும் நன்றாக இருக்கிறது. பெண்: நான் பார்க்கிறேன், ஆமாம், அவ்வளவு சூடாக இல்லை, ஆமாம், அவ்வளவு சூடாக இல்லை. நல்லது. மிகவும் நல்லது. நீங்கள் உடன் வாருங்கள். நீங்கள் அதை தலையில் உணர்ந்தீர்கள். கைகளில் இல்லை. அந்தப் பக்கத்தை பார்த்து அமர முடியுமா?

பெண்: இந்தப் பக்கமா? சஹஜ யோகி: அவரை நோக்கி. பெண்: அவரை நோக்கியா? விஷுத்தி உள்ளது ஸ்ரீ மாதாஜி: அவர் பாடுவாரா? சஹஜ யோகி: நீங்கள் பாடுவீர்களா? ஆமாம். பின்னால் வாருங்கள், தயவுசெய்து. விஷுத்தியில் நுண்ணதிர்வுகளை தருகிறேன். இவருக்கு ஸ்பான்டைலிடிஸ் வருக்கூடும். மிக மோசமாக உள்ளது.

குற்ற உணர்வு வேண்டாம். உங்களுக்கு குற்ற உணர்வு இருக்கிறதா? நீங்கள் ஒரு கத்தோலிக்கரா? பெண்: இல்லை… நீங்கள் குற்றமாக உணரக்கூடாது. நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? பெண்: நான் என்ன வேலை செய்கிறேன்? அவள் என் மேசையை நடத்துகிறாள். சஹஜ யோகி: அவள் அவனது மேஜையில் இருக்கிறாள்.வரவேற்பாளர். சஹஜ யோகி: வரவேற்பு, ஆம். ஸ்ரீ மாதாஜி: அவள் மேசையில் இருக்கிறாளா?

எப்பொழுதும் வேலையாக இருப்பவர் இப்போது, ​​நீங்கள் உங்கள் கைகளில் உணர்கிறீர்களா – பாருங்கள். சஹஜ யோகி: உங்கள் கைகளை உயர்த்தி அவரிடம் சொல்லுங்கள். இப்போது திரும்புங்கள். இப்போது, ​​உணர்கிறீர்களா? சிறிதளவு? சரி. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறு ஏதேனும் கேள்விகள் இருக்கிறதா? உங்கள் எல்லா கேள்விகளுக்கும் நான் பதிலளித்துவிட்டேனா? எனவே இப்போது, ​​எப்படி தியானம் செய்வது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அவ்வளவுதான். நீங்கள் அதை புரிந்து கொண்டால், நீங்கள் வளருவீர்கள், மிக வேகமாக வளருவீர்கள். நிச்சயமாக நீங்கள் வளருவீர்கள் என்று நான் நம்புகிறேன், பின்னர் நீங்கள் உங்களையேப் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள் ஏனென்றால் நீங்கள் எதற்கும் கலங்க மாட்டீர்கள். எந்த மன அழுத்தமும் இருக்காது. நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஏனெனில் மன அழுத்தத்தில் சிக்கி என்ன பயன்? உங்களால் தீர்க்க முடியாது. தீர்க்க முடியாத பிரச்சனை. நீங்களே தீர்வு காண்பதன் மூலம் மட்டுமே சிக்கலை தீர்க்க முடியும். ஏனென்றால் பிரச்சனை உங்களிடம் தான் உள்ளது, வெளியில் இல்லை.

நீங்கள் அப்படி நினைத்தால், சரியாகிவிடும். மேலும் நீங்கள் அனைவரும் மிகவும் நன்றாக உணர முடியும். நீங்கள் நன்றாக தூங்குவீர்கள், மேலும் வாழ்க்கையை சிறப்பாக அனுபவிப்பீர்கள். எனவே, உங்கள் அனைவரையும் இந்தியாவிற்கும் அழைக்க விரும்புகிறேன். முடிந்தால் வாருங்கள். அங்கு ஒரு நல்ல நிகழ்ச்சி உள்ளது. கடற்கரை உள்ளது மற்றும் மகிழ்ச்சியாக இருக்கலாம். இசைக்கான சகஜ யோகா நிறுவனம் ஒன்றுக்கு அவர் சென்றிருக்கிறார். அவள் எப்படி முன்னேறியுள்ளார் என்று பாருங்கள்! அவள் இசைக்கும் விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இது மிகவும் பெரிய விஷயம். இந்திய இசை அவ்வளவு எளிதானது அல்ல, அவ்வளவு எளிதில் கற்க முடியாது. ஆனால் நான் ஆச்சரியப்பட்டேன், மூன்று மாதங்களில், சிறுவர்கள் பாடிக்கொண்டிருந்தனர் “நீங்கள் எப்படி கற்றீர்கள்” என்று கேட்டேன் கற்பனை செய்து பாருங்கள், மூன்று மாதத்தில்..மூன்று மாதத்தில்.. அதாவது, சாதாரணமாக கற்றுக்கொள்ள பல வருடங்கள் ஆகும். பல விஷயங்கள் நடந்தன… ஏனென்றால் அவர்கள் விழிப்புணர்வு பெற்ற ஆத்மாக்களாகிவிட்டதால், அவர்களால் மிக வேகமாக கற்றுக் கொள்ள முடியும். அவர்கள் எப்படி கற்றுக் கொண்டார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் தபேலாவை கற்றுக் கொண்டாள் இந்தியாவில் கூட தபேலாவை வாசிக்கக்கூடிய எந்த பெண்ணையும் நீங்கள் காண முடியாது. இது உண்மையில் குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்க விஷயங்கள் நடந்தன. மேலும் நீங்களே குறிப்பிடத்தக்கவராக மாறுவீர்கள். சரி, மிக்க நன்றி.

நன்றி, கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். எனவே நீங்கள் எம்ரோவின் உதவியைப் பெறலாம், ஆத்ம விழிப்புணர்வு கொடுப்பதில் அவர் உங்களுக்கு உதவ முடியும். நீங்கள் செய்தது மிகவும் நல்ல விஷயம் – நான் உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவராக இருக்கிறேன். ஏனென்றால் நான் முதலில் பெண்களுடன் பேச விரும்பினேன் ஏனென்றால் அவர்கள் எவ்வளவு சக்திவாய்ந்தவர்கள் என்று அவர்களுக்குத் தெரியாது. கேத்தரின்! சஹஜ யோகி: இப்போது, ​​யாரேனும் சகஜ யோகா பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால் அல்லது ஆத்ம விழிப்புணர்வு பற்றி நிறைய இருக்கிறது… யாரேனும் விரும்பினால், அவரிடம் இப்போது தகவல் உள்ளது சஹஜ யோகத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இது உண்மையில் மிக சிறந்தது எனவே நாம் இங்கும் சில அமர்வுகள் நடத்த வேண்டும். என்னைப் பார்க்க ஒரு நடிகர் கூட வந்தார். அவருக்கு ஒரு பிரச்சனை இருந்தது, அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. நடிகர் அவருக்கு அவரைத் தெரிந்திருக்கிறது. நீங்கள் சில நடிகர்கள் மற்றும் நடிகைகளைப் பெற முயற்சிக்க வேண்டும்.

இது ஒரு நல்ல யோசனையாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் அனைவரும் கஷ்டப்படுகிறார்கள் உண்மையில் அவர்கள் மிக வேகமாக இறந்துவிடுகிறார்கள். மிக்க நன்றி. நன்றி.