Christmas Puja Ganapatipule (India)

கிறிஸ்துமஸ் பூஜை டிசம்பர் 25, 2002 கணபதிபுலே, இந்தியா உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! சகஜ யோகாவின் படி, கிறிஸ்து உங்கள் ஆக்ஞா சக்கரத்தில் நிலைத்துள்ளார். அவரது முழு வாழ்க்கையும் ஒரு விழிப்புணர்வு பெற்ற ஆத்மாவாக இருக்கும் ஒரு நபரின் குணங்களை சித்தரிக்கிறது. மற்றும் அவர் பரிந்துரைத்தது என்னவென்றால் தனது சொந்த வாழ்க்கையில் உங்களிடம் பேராசை அல்லது மோகம் இருக்கக்கூடாது. இந்த நாட்களில் மக்கள் உலகம் முழுவதும் பேராசை கொண்டுள்ள விதம் உண்மையில் அதிர்ச்சியளிக்கிறது. குழந்தை பருவத்திலிருந்தே, நம்முடைய குழந்தைகள் இதைக் கேட்பது அல்லது அதைக் கேட்பது என்று கற்றுக் கொண்டனர். வாழ்க்கையில் முழுமையான திருப்தி மட்டுமே உங்களுக்கு அந்த சமநிலையை, அந்த சமநிலையை கொடுக்க முடியும், இதன் மூலம் நீங்கள் எந்த விஷயங்களுக்கும் ஆசைப்பட மாட்டீர்கள். இன்றைய காலத்தில் இந்தியா கூட மிகவும் மேற்கத்தியமாகிவிட்டது அவர்களும் இது அது என பெற மிகவும் விரும்புகிறார்கள். உண்மையில், இப்போது அமெரிக்காவில், திடீரென்று இது நடப்பதால், மக்கள் ஆன்மீகத்திற்கு வருகிறார்கள். அவர்கள் ஆன்மீகத்திற்கு வருகிறார்கள் ஏனென்றால் அவர்கள் எங்கும் திருப்தி அடையவில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் நாம் அவருடைய வாழ்க்கையிலிருந்து பார்க்க வேண்டும், கிறிஸ்துவின் உயர்ந்த வாழ்க்கையை. முதலில் அவர் ஒரு சிறிய குடிசையில் பிறந்தார், நீங்கள் சுற்றி வரும்போது அவர்களில் பலரைப் பார்த்தீர்கள், மிகவும் திருப்தியடைந்தார் மேலும் அவர் தொட்டிலில் வைக்கப்பட்டார், இது அனைத்தும் உலர்ந்த, மிகவும் உலர்ந்த புல்லால் மூடப்பட்டிருந்தது. உன்னால் கற்பனை செய்ய இயலுமா? பின்னர் சிலுவையில் அவர் அறையப்பட்டு அவரது உயிரை தியாகம் செய்தார். முழுக்க முழுக்க இது ஒரு தியாகத்தின் கதை ஏனென்றால் அவரிடம் ஒரு சக்தி இருந்தது, அது தான் அவர் எதையும் தியாகம் செய்யக்கூடிய ஆத்மாவின் சக்தி. தன் உயிரைக் கூட தியாகம் செய்தார். எனவே கிறிஸ்துவின் மகத்துவத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம் அவருடைய ஆன்மீகத்தின் சிறந்த ஆளுமையில் இருந்து வந்தது. ஆனால் அதே கிறிஸ்து வணங்கப்படுகிறார் உலகம் முழுவதும், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் அவர்கள் எப்படி பொருளின் பின் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவர்களின் அனைத்து தொழில்களும் இயங்குகின்றன அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றிய பெரிய கதைகளுடன் மற்றும் மக்கள் தங்கள் செல்வாக்கைப் பற்றி எப்படி பெருமையாக எண்ணுகிறார்கள். அவர்களுக்கு ஒரு சிலுவை இருக்கும் தாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதைக் காட்ட அவர்களின் கழுத்தில். முதலில் அந்த சிலுவையை அணியக்கூடாது அதில் கிறிஸ்து Read More …

பிறந்தநாள் பூஜை உரை, டெல்லி, இந்தியா பிறந்தநாள் பூஜை: நீங்கள் உண்மையிலேயே உங்கள் நாட்டை நேசித்தால், நீங்கள் ஒருபோதும் நேர்மையற்றவராக இருக்க முடியாது New Delhi (India)

இன்று, எனது எழுபத்தி எட்டாவது பிறந்தநாளைக் கொண்டாட நீங்கள் அனைவரும் முடிவு செய்துள்ளீர்கள். குழந்தைகளின் பிறந்த நாளுக்கு அன்பான கரங்களுடன் பலூன்கள் கட்டுவது போல் கட்டியிருக்கிறீர்கள். நேற்று, நான் சொன்னது போல், உங்களைப் பற்றி நீங்கள் கண்டறிய வேண்டும். நீங்கள் என்னை நேசிப்பது போல், மற்றவர்களை எவ்வளவு நேசிக்க முடியும் என்பதை அறிய முயற்சி செய்யுங்கள். சுயபரிசோதனை மூலம் நீங்கள் மற்றவர்களை எவ்வளவு நேசிக்கிறீர்கள், மற்றவர்களிடம் எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை கண்டுபிடிக்க மிகவும் எளிதாக இருக்கும். அப்படி நடந்தால், சகஜ யோகாவில் கூட பல பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும். சஹஜ யோகாவில் இருக்கும் மக்கள் பணத்தின் மீது இன்னும் பெரியதாக விருப்பம் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குச் சொல்லப்படுகிறது. கொஞ்சம் பணம் சம்பாதிக்கும் இடம் என்று நினைக்கிறார்கள். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் உண்மையில் வேலை செய்யக்கூடிய பகுதி இதுவல்ல. நீங்கள் எந்த நேரத்திலும் வெளிப்படுவீர்கள். மாறாக சகஜ யோகாவில் உங்கள் சக்திகளைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் என்னவென்று எனக்கு தெரியாது, பின்னர் நீங்கள் துரதிர்ஷ்டவசமாக தவறாக நினைக்கிறீர்கள். அந்த இடம் இது இல்லை. அதற்காக நீங்கள் அரசியலில் சேரலாம். அல்லது பணம் சம்பாதிப்பதற்காக நீங்கள் ரேஸ் கோர்ஸ் அல்லது சில இடங்களுக்கு செல்லலாம். நீங்கள் சகஜ யோகத்திற்கு வருகிறீர்கள் என்றால், நீங்கள் பெற வேண்டியது அன்பின் கடல் உங்கள் இதயத்தில் மற்றும் மற்றவர்களிடமும் அதைத் தேடுங்கள். எல்லாவற்றையும் மிகவும் சீராக, அழகாகச் செய்ய உதவும் அன்பு இது. நான் எப்போதும் சொல்வது போல், நீங்கள் உங்கள் நாட்டை உண்மையாக நேசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒருபோதும் நேர்மையற்றவராக இருக்க முடியாது. உங்களுக்கு வேறு எந்த விருப்பமும் இருக்காது நீங்கள் சுதந்திரமாக மற்றும் உங்கள் நாட்டுக்காக நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தவிர. இந்த நாட்டில் மாபெரும் தியாகிகளை பெற்றுள்ளோம். ஒருவேளை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், உங்களில் சிலருக்கு. சித்திரவதையான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்த விதமானது, அவர்கள் தங்கள் நாட்டை நேசித்ததால் தான் நடந்தது . உங்கள் நாடு ஆன்மீக நாடாகும். இது நீங்கள் முழுமையாக அனுபவிக்கும் நாடு. அமைதியைத் தவிர வேறெந்த தொந்தரவும் இல்லாத நாடு அது. மேலும், நீங்கள் அந்த நாட்டை நேசிக்கும்போது, எப்படி இந்த மாதிரியான முட்டாள்தனமான யோசனைகளை நீங்கள் செய்து கொண்டிருக்க முடியும் பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் அதற்கெல்லாமா? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. Read More …

Talk about all Chakras Errol Douglas, London (England)

இத்தகைய ஒரு தனித்துவம் வாய்ந்த கூட்டத்திற்கு என்னை அழைத்ததற்காக திரு எம்ரோவுக்கு நன்றி. இந்த தலைப்பு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது அதாவது, எப்படி சகஜ யோகா அழகுக்கு உதவும். இப்போது சகஜ யோகா, உங்களுக்குத் தெரிந்தபடி, இங்கே அது காட்டப்பட்டுள்ளது நீங்கள் பார்ப்பது போல், உங்கள் முக்கோண எலும்பில் ஒரு சக்தி இருக்கிறது. இது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது – ஒவ்வொரு (மனிதனுக்கும்). மேலும் இந்த சக்தி எழுப்பப்பட வேண்டும். பின்னர் அது இந்த ஆறு மையங்கள் வழியாக செல்கிறது. ஏழாவது கீழே உள்ளது, எண் ஒன்று, மற்றும் உங்கள் உச்சிக்குழி எலும்பு பகுதி வழியாக துளைத்து உங்களை தெய்வீகத்துடன் இணைக்கிறது. அதன் விளைவாக, இந்த மையங்கள் அனைத்தும் – இவற்றின் பொறுப்பான நம் உடல், மன, உணர்ச்சி மேலும் ஆன்மீக இருப்பும் அவை அனைத்தும் அறிவொளி பெற்று ஒருங்கிணைகின்றன. இந்த சக்தி அனைவரிடமும் உள்ளது. ஆனால் அதைப் பற்றி பேசும் பொழுது, மக்கள் அதை நம்புவதில்லை. உங்களுக்கு அதன் அனுபவம் கிடைக்க வேண்டும். உங்களுக்கு அந்த அனுபவம் கிடைத்தவுடன், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், நீங்கள் கற்பனை கூட செய்ய முடியாத பல விஷயங்கள் உங்களுக்கு எப்படி நடக்கிறது என்று! அந்த வகையில், அவர் என்னை இங்கே அழைத்தது மிகவும் கனிவானது அந்த வகையினர் பலரை நான் சந்தித்திருக்கிறேன் ஆனால் இந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள கூடியவர்களை அழைக்க யாரும் முயற்சித்ததில்லை இப்போது அழகுக்கு வருகிறேன், தெய்வீகம் தான் மிக அழகான விஷயம் என்று நான் உங்களுக்கு கூற வேண்டும் ஏனென்றால் அது எல்லா அழகிய பொருட்களையும் உருவாக்குகிறது. இயற்கையை நீங்கள் பார்த்தால், ஒவ்வொரு இலையும் மற்றொன்றிலிருந்து வேறுபட்டது. அவ்வளவு வகைகள்! மேலும், நீங்கள் பார்த்தால், அனைத்து இலைகளும் சூரிய ஒளியைப் பெறும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அத்தகைய கருதுதல்! அத்தகைய புரிதல்! அதேபோல், தெய்வீகம் உங்களுள் வேலை செய்யும் போது, உங்களுக்கும் அந்த திறன் உள்ளது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் புரிந்து கொள்ளவும் மற்றும் முழுமையின் ஒரு அங்கமாகவும் இருக்கவும். நீங்கள் மட்டுமல்ல, தனி நபர் (எல்லாம்). இப்போது, ​​ஒரு விஷயம் உள்ளது. அதாவது, மக்கள் இப்போது தங்கள் அழகின் மீது நினைப்பாயிருக்கிறார்கள். ஆனால் ஒருவேளை நாம் எப்படி நம் அழகைக் கெடுக்கிறோம் என்றுத் தெரியாமால் இருக்கலாம். முதலில், நம் அழகு எப்படி கெடுகிறது என்று பார்ப்போம். இது சில நேரங்களில் முகத்தில் நிறைய சுருக்கங்களைக் Read More …

மஹாமாயா பூஜை உரை, நியூசிலாந்து. ஸ்ரீ மஹாமாயா பூஜை: நாம் அனைவரும் அவரது உடலில் இருக்கிறோம் Auckland (New Zealand)

எனது முன்னோர்களான ஷாலிவாஹனர்களின் நாட்காட்டியின்படி புத்தாண்டு தினத்தின் முதல் நாள் இன்று. மேலும் மகாராஷ்டிரா முழுவதும், இதை புத்தாண்டு தினமாகவும், எதையும் தொடங்குவதற்கான சிறந்த நாளாகவும் கருதப்படுகிறது. எனவேதான் இன்று நான் மஹாமாயா பூஜை செய்ய முடிவு செய்துள்ளேன். மஹாமாயாவைப் பற்றி நான் ஒருபோதும் பேசியதில்லை, ஏனெனில் அது பேசப்படவோ அல்லது சொல்லப்படவோ கூடாது – எல்லோரும் சொல்வது போல் இது ஒரு ரகசியம். இது சஹஜ யோகத்தின் அடிப்படை என்பதை நான் சொல்ல வேண்டும், ஏனெனில் இது விவரிக்கப்பட்டுள்ளது, தேவி சஹஸ்ராரத்தில் வரும்போது, அவரே சக்தி, அவரே மஹாமாயா – “சஹஸ்ராரத்தின் மஹாமாயா,” என்று ஏற்கனவே விவரிக்கப்பட்டுள்ளது. அவரே மஹாமாயாவாக இருக்க வேண்டும், அதாவது, அவர் தன்னை முழுமையாக மறைத்துக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் யாராலும் அவரை தேவியாக அறிய முடியாது; அவர்கள் விழிப்புணர்வு பெற்றாலும், அதுவே அவர்களின் முடிவாக இருக்கக்கூடாது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதல் விஷயம் அவர் செய்ய வேண்டிய பணி. மஹாமாயாவின் பணி விழிப்புணர்வை வழங்குவதாகும். இப்போது நான் புலியின் மீது கையில் வாளுடன் வந்திருந்தால் யாரும் என் அருகில் நின்றிருக்கக்கூட மாட்டார்கள். நீங்கள் அனைவரும் என்னை விட்டு விலகி ஓடியிருப்பீர்கள். வேறு எந்த வடிவத்தில் தேவி வந்திருந்தாலும், அவர் செய்ய வேண்டியதை அவரால் செய்திருக்க முடியாது. மேலும், அவர் கிறிஸ்துவின் தாயாகவோ அல்லது ஸ்ரீ சீதாஜியாகவோ வந்திருந்தால் அல்லது நீங்கள் பாத்திமாபீபியைச் சொல்லலாம் – அவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டனர். நான் சொல்வது, அவர்கள் அவ்வளவு சீக்கிரம் இந்த உலகத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அவர்களால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. இப்போது இந்த வேலை, மற்றவர்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பது என்பது ஒரு கடினமான வேலை, மிகவும் சிக்கலானது. இது ஏதோ ஒரு பெரிய ஆளுமையால் செய்யப்பட வேண்டியது என்று யாரும் உணராத வகையிலும் அல்லது அதில் மிகுந்த பிரமிப்போ அல்லது பயமோ ஏற்படாதவாறும் செய்யப்பட வேண்டும். எனவே மக்கள் நெருங்கி வருவதற்காக மஹாமாயா அவதாரமாக வர வேண்டியிருந்தது. மேலும், இது ஒரு நன்மையைக் கொண்டுள்ளது, மிகச் சிறந்த நன்மை என்னவென்றால், ஒரு எளிய நபராக, ஒரு இல்லத்தரசியாக, விழிப்புணர்வு கொடுக்கத் தொடங்கும் போது, மக்கள் திகைத்துப் போகின்றனர். மேலும் அவர்கள் நினைப்பார்கள், “அவராலேயே அதைச் செய்ய முடிந்தால், நாம் ஏன் அதைச் செய்யக் கூடாது? என்று. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஒரு சாதாரண Read More …

பேச்சு, கருத்தரங்கு நாள் 1, ஷூடி முகாம், யுகே, கருத்தரங்கு நாள் 1. உள்ளாய்வு மற்றும் தியானம் Shudy Camps Park, Shudy Camps (England)

இந்த ஆண்டு நாங்கள் இங்கிலாந்தில் பொது நிகழ்ச்சிகளைக் கொண்டிருக்க மாட்டோம், ஏனெனில் சில சூழ்நிலைகளும் உள்ளன. ஆனால், ஏதோ ஒரு வகையில் அல்லது வேறு விதமாகவோ, நமது திட்டங்களை மாற்றும் சூழ்நிலை ஏற்படும் போதெல்லாம், அந்த மாற்றத்திற்குப் பின்னால் ஒரு நோக்கம் இருக்கிறது என்பதை நாம் உடனடியாக அறிந்து கொள்ள வேண்டும், அதை நாம் உடனடியாக திறந்த இதயத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் – தெய்வீகம் நாம் மாற வேண்டும் என்று விரும்புகிறது. நான் ஒரு சாலையில் செல்கிறேன் என்று வைத்துக் கொண்டால், மக்கள், ”நீங்கள் வழியை தவறவிட்டீர்கள் அன்னையே” என்று கூறுவார்கள். அது பரவாயில்லை. நான் ஒருபோதும் தொலைவதில்லை, ஏனென்றால் நான் என்னுடன் இருக்கிறேன்! ஆனால் நான் அந்த குறிப்பிட்ட சாலையில் செல்ல வேண்டியிருந்தது. அதுதான் விஷயம். நான் அதைச் செய்ய வேண்டியிருந்தது, அதனால்தான் நான் அந்த சாலையில் இருக்கவில்லை, நான் என் வழியை தவறவிட்டேன். அத்தகைய புரிதல் உங்களிடம் இருந்தால், உங்கள் இதயத்தில் அந்த திருப்தி இருந்தால், நீங்கள் நினைப்பதை விட வாழ்க்கை மிகவும் மதிப்பு வாய்ந்தது என்பதை நீங்கள் காண்பீர்கள். இந்த ஆண்டு கண்டிப்பாக பொது நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்தோம், மேலும் நம்மால் பொது நிகழ்ச்சிகளை நடத்த முடியவில்லை.இதன் காரணம் என்ன? என்று நான் யோசித்தேன். எனவே நாம் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே காரணம் ஆகும். உயிருள்ள மரமான ஒரு மரத்தின் வளர்ச்சியில், அது ஒரு குறிப்பிட்ட திசையில் ஒரு புள்ளி வரை நகர்கிறது, ஒரு மாற்றம் ஏற்படும் வரை. ஏனென்றால் அந்தப் பக்கம் சூரியன் வராமல் இருக்கலாம், ஒருவேளை நீர் நிலைகள் வராமல் இருக்கலாம், அதனால் அவை மாறத் தொடங்குகின்றன. அதே போல, நாம் இறைவனின் கைகளில் இருக்கிறோம் என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் சில திட்டங்கள் மாற்றப்பட்டால், அது நம்மீது மீண்டும் பிரதிபலிக்கிறது என்றால், ஏன் என்று நாம் பார்க்க வேண்டும். அது ஏன் என்பதை தெரிந்துகொள்ள நாம் ஒருங்கிணைக்க வேண்டும். சஹஜ யோகிகளின் ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானது. முதலில் உங்களை ஒருங்கிணைக்க, நீங்கள் தன்னாய்வு செய்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்களுக்குள் உள்ள ஒளியை பிரதிபலிக்கவும் மற்றும் நீங்களே உங்களை பார்த்துக்கொள்ளவும் நீங்கள் தன்னாய்வு செய்து கொள்ள வேண்டும்: சஹஜ யோகாவில் இதுவரை என்ன செய்துள்ளீர்கள்? நீங்கள் எங்கே இருந்தீர்கள், எவ்வளவு தூரம் சென்றிருக்கிறீர்கள் , மேலும் நீங்கள் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? Read More …

Guru Puja: Cosmic Consciousness Gmunden (ஆஸ்திரியா)

உங்கள் அன்பின் இந்த அழகிய வெளிப்பாட்டைக் கண்டு பிரமிக்கிறேன். அத்தகைய கவனமும் படைப்பாற்றலும். வெளிப்புற இயற்கையை இங்கு மிகவும் அழகாக உருவாக்கபட்டதற்கு நான் மிக அதிர்ஷ்டசாலியான குருவாக இருக்க வேண்டும். இதைப் பார்த்த பிறகு, எந்த குருவும் தனது இதயம் முழுமையாக உருகுவதில் இருந்து தப்ப முடியாது. உண்மையில், என் சீடர்கள் மிகவும் புத்திசாலி மக்கள். அவர்களால் எந்த குருவையும் நடுநிலையாக்க முடியும். இதனால், சீடரை ஒழுங்குபடுத்துவதற்கு பயன்படுத்தப்படும் குருவின் கோல், தாமரையாக உரு மாறும். ஒவ்வொரு முறையும் சஹஜ யோகிகள் தெய்வீகத்துடன் ஒன்றாவதைப் பார்ப்பது ஒரு அழகான ஆச்சரியம். அவர்களின் மகிழ்ச்சியின் வெளிப்பாடு மற்றும் தெய்வீகத்தின் கருத்தாக்கத்தை நீங்கள் மிக தெளிவாகக் காணலாம். இன்று நான் அமர்ந்திருப்பது போல தான், நீங்கள் அனைவரும் தேவனுடைய ராஜ்யத்தில் அமர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாம் இப்போது பிரம்மா எனும் அந்த அண்ட விழிப்புணர்வின் ஒரு அங்கமாக இருப்பதை உணர வேண்டும் உருவாக்கி, ஒருங்கிணைத்து, அனைத்து விவரங்களையும் திட்டமிட்டு, அதன் வெளிப்பாட்டின் மூலம் அதன் படைப்பை நேசிப்பது அந்த அண்ட விழிப்புணர்வு ஆகும். நாம் அதில் இருப்பது மட்டுமின்றி, அதைக் கையாளவும் முடியும். நாம் அதை ஒழுங்குபடுத்தலாம், அதைப் பயன்படுத்தலாம், அதைச் செயல் படுத்தலாம். இந்த நிலையில் நாம் இருந்தால் தான் நாம் குரு ஆவோம். குரு என்றால் பூமியின் ஈர்ப்பு விசையை விட உயர்ந்தது, அல்லது பூமியின் ஈர்ப்பை விட வலிமையானது. பூமியின் ஈர்ப்பு என்றால் என்ன? மேலோட்டமாக பார்த்தால், நம்மை தரையில் வைத்திருக்க நம் உடலில் செயல்படும் ஒரு விஷயமாக புரிந்துகொள்கிறோம் பல யானைகள் நம் தலையில் நிற்ககும் ஒரு பெரிய வளிமண்டலம் உள்ளது மேலும் பூமிஅன்னை நம்மை தன்னை நோக்கி இழுக்கும் ஈர்ப்பு உள்ளது. மேலோட்டத்தில் நாம் ஈர்ப்பு விசையை இவ்வாறுப் புரிந்துகொள்கிறோம் மேலோட்டத்தில் சில சமயங்களில் குரு தத்துவத்தையும் புரிந்துகொள்கிறோம் மேலோட்டமாக பார்த்ததால், ஒரு நல்ல குரு என்பவர், உங்களை அவரை நோக்கி ஈர்க்கும் நபர் என்று நினைக்கிறோம். உடல் ஈர்ப்பு, அல்லது மேலோட்டமான மற்ற ஈர்ப்புகளாக இருக்கலாம். அதனால்தான் மக்கள் எப்போதும் தவறான, மேலோட்டமான குருக்களிடம் செல்கிறார்கள். ஆனால் பூமி அன்னையின் ஈர்ப்புக்கு மேலே இருப்பவர், வெளிப்புற, நுட்பமான, மிக நுட்பமான, மற்றும் மிக மிக நுட்பமானவற்றிக்கும் – இந்த எல்லா ஈர்ப்புகளுக்கும் அப்பால் இருப்பவர் – அவர் தான் குரு. பொதுவாக மக்கள் உடல் உறுப்பு, உடல் Read More …

பூஜை உரை, பூஜையின் அர்த்தம், பார்சிலோனா, ஸ்பெயின். மஹாலக்ஷ்மி பூஜை: பூஜையின் முக்கியத்துவம் Madrid (Spain)

இன்று நான் உங்களுக்கு பூஜையின் முக்கியத்துவத்தை கூறப்போகிறேன் (ஒரு ஸ்பெயின் நாட்டு யோகி மறுப்பையர்ப்பாளரிடம் ஸ்ரீ மாதாஜி சொல்கிறார் இந்த மிகிரோபோனை எடுத்துக்கொள் ) முந்தைய காலக்கட்டத்தில் கிறிஸ்துவர்கள் கூட அன்னை மேரி மற்றும் ஏசுவின் சிலைகளோ அல்லது புகைப்படங்களோ (வரைபடங்களோ) அல்லது கண்ணாடி வரைபடங்களின் பிரதிகளையோ வைத்து துதித்து பூஜித்து வந்தனர். ஆனால் பின்னர், மக்கள் பகுத்தறிவாளர்களாக ஆக தொடங்கினர் மற்றும் அவர்கள் பூஜையின் முக்கியத்துவத்தை பற்றி புரிந்துகொள்ளவும் இல்லை மற்றும் அவர்களுக்கு அதை பற்றி விளக்க முடியாமல் போனதால் அவர்கள் வழக்கமான முறையில் பூஜை செய்வதை கைவிட்டனர் ஏசுவிற்கு முன்புகூட அவர்களிடத்தில் ஒரு விதமான அளவிடப்பட்ட மற்றும் சிறப்பாக செய்யப்பட்ட, மற்றும் வணங்குவதற்கு ஏற்ற பூஜைக்கான இடமாக ஒரு கூடாரம் உருவாக்கப்பட்டது. எவரை வணங்கினார்களோ, அவரை யஹோவா என்று அழைத்தனர். இப்போது இந்த யஹோவா என்பது நமது சஹஜ யோகாவில் சதாஷிவா அவர்களை குறிப்பிடுகின்றது மற்றும் அன்னை மேரி என்பது மஹாலக்ஷ்மியை குறிப்பிடுகின்றது அன்னை மேரி இதற்கு முன்பும் அவதாரம் எடுத்துள்ளார் அவர்கள் அன்னை சீதையாக அவதரித்தார் மற்றும் அதற்குப்பிறகு ராதாவாக அவதரித்தார் மற்றும் அதற்குப்பிறகு அன்னை மேரியாக அவதரித்தார். தேவீமாஹாத்ம்யம் எனும் புத்தகத்தில் ஏசுவின் பிறப்பைப்பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு, அன்னை ராதையின் மகன் ஆவார். அன்னை ராதையே மஹாலக்ஷ்மி நமது கடவுளாகிய இயேசு கிறிஸ்து மற்றொரு நிலையில் முட்டை வடிவில் பிறந்தார். முட்டையில் பாதி ஸ்ரீ கணேசராகவும், அதில் மீதம் உள்ள பாதி மஹாவிஷ்ணுவாகவும் உருவானது. யேசுநாதரைப்பற்றிய அனைத்து விளக்கமும் மஹாவிஷ்ணுவின் விளக்கவுரையில் இதேபோல் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ மஹாலக்ஷ்மி, மாசற்ற கருவின் மூலம் உருவான தனது குழந்தையுடன் இந்த பூமியில் வந்தார். இதேபோல் ராதையாக அவர் இதற்கு முன்புகூட செய்துள்ளார் எனவே ஏசுநாதர் மஹாப்ரஹ்மாண்ட உருவமான விராட்டாவின் மகனாவார் உண்மையில் (விஷ்ணு,மஹாவிஷ்ணு), விஷ்ணு இந்த விராட்டா ஆவார். இப்பொழுது இந்த விஷ்ணு தத்துவம் விராட்டா ஆகிறது. மற்றும் அவர் இராமராகவும் கிருஷ்ணராகவும் ஆவார் மற்றும் விராட் என்றால் அக்பர் (கடவுள் மிகப்பெரியவர்). எனவே கிறிஸ்துதான் ஓம்காரமும் ஆவார், நுண்ணதிர்வுகளும் ஆவார். முற்றிலும் ஓம்காரத்தின் வடிவமான ஏசுநாதரின் உடலைத் தவிர மற்ற எல்லா அவதாரங்களும் பூமித்தாயின் கொள்கையையோ / தத்துவத்தையோ அல்லது சாராம்சத்தையோ கொண்டு அவர்களது உடல்களை உருவாக்கினர். அவர்களது உடல்களில் பூமியின் பகுதி ஸ்ரீ கணேசரை குறிக்கும் இதனால் நாம் ஸ்ரீ கணேஷரின் சக்தியே கிறிஸ்துவாக அவதாரம் எடுத்தது எனக் Read More …

Advice for Effortless Meditation London (England)

வாழ்க்கையில் … அதுபோலவே நுண்ணதிர்வுகள் பாய்ந்து கதிர்வீச்சாகப் பரவுகின்றன. நீங்கள் செய்யவேண்டியது, அதன் தாக்கத்திற்கு உங்களை உட்படுத்த வேண்டும். எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பதே சிறந்தவழி. எங்கு உபாதையெனக் கவலைப்பட வேண்டாம். தியானத்தின் போது , பலரை நான் பார்த்திருக்கிறேன். எங்காவது உபாதையிருந்தால் அதிலேயே கவனம் செலுத்துகின்றனர் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை விட்டு விடுங்கள். அது தானாகவே சரிசெய்யப்படும். இது எளிதானது. ஆக நீங்கள் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. இதுதான் தியானமாகும். தியானம் என்பது கடவுளின் அருளுக்கு உங்களை உட்படுத்துவதாகும். அந்தக் கருணைக்கே உங்களை எப்படி குணப்படுத்துவது என்று தெரியும். உங்களை குணப்படுத்தி, உங்களுக்குள் எப்படி தன்னை தக்க வைத்துக் கொள்வது என்று தெரியும். உங்கள் ஆத்மாவைப் பிரகாசிக்கச் செய்யும். அதற்கு அனைத்தும் தெரியும். எனவே நீங்கள் என்ன செய்ய வேண்டும், அல்லது என்ன நாமம் கூற வேண்டும், என்ன மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என்று கவலைப்பட வேண்டியதில்லை. தியானத்தில் நீங்கள் முற்றிலும் முயற்சியின்றி இருக்க வேண்டும். நீங்கள் முழுமையாக உங்களை உட்படுத்த வேண்டும். அச்சமயம் நீங்கள் முற்றிலும் எண்ணங்களற்று இருக்க வேண்டும். ஒரு வேளை, உங்களால் எண்ணங்களற்று இருக்க இயலாத நிலையில் அந்த நேரத்தில் நீங்கள் உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள். ஆனால், அதில் ஈடுபாடு கொள்ள வேண்டாம். சூரியன் மெல்ல உதிக்கும்போது,இருள் நீங்கி சூரியக் கதிர்கள் ஒவ்வொரு மூளை முடுக்குகளில் சென்று அந்த இடத்தை முழுவதுமாக ஒளிபெற செய்வதைக் காண்கிறீர்கள். அது போன்று, உங்கள் தேகம் முற்றிலும் ஒளிபெறும். ஆனால் அச் சமயம் , முயற்சித்தாலோ அல்லது உங்களுக்குள் நடக்கும் ஒன்றை தடுக்க நினைத்தாலோ, அல்லது பந்தன் கொடுக்க முயற்சித்தாலோ அதற்குத் தெரியும். தியானத்திற்கு முயற்சியின்றி இருப்பதுதான் ஒரே வழி. ஆனால், நீங்கள் சோம்பலாக இருத்தல் கூடாது. நீங்கள் உன்னிப்பாக அதைக் கவனிக்க வேண்டும். மற்றொருபுறம், மனிதர்கள் உறங்கி விடுகின்றனர். அப்படியல்ல , நீங்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் உறங்கினால் ஒன்றும் நடக்காது. மறுபுறம் நீங்கள் சோம்பலுடன் இருந்தால் ஒன்றும் நடக்காது. நீங்கள் கவனமாக, ஏற்பதற்குத் தயாராக, முழு விழிப்புடன் இருக்க வேண்டும். முயற்சியே இல்லாது – முற்றிலும் முயற்சியில்லாது. நீங்கள் முற்றிலும் முயற்சியற்று இருந்தால் தியானம் சிறப்பாக அமையும். உங்கள் பிரச்சனைகளைப் பற்றியே சிந்திக்காதீர்கள். எந்த சக்கரம் குறையுடன் இருந்தாலும், எதுவாக இருந்தாலும், உங்களை அதற்கு உட்படுத்தினால் போதும். சூரியன் ஒளி பிரகாசிக்கும் போது, சூரியனுக்கு இயற்கை தன்னை Read More …