பேச்சு, கருத்தரங்கு நாள் 1, ஷூடி முகாம், யுகே, கருத்தரங்கு நாள் 1. உள்ளாய்வு மற்றும் தியானம் Shudy Camps Park, Shudy Camps (England)

இந்த ஆண்டு நாங்கள் இங்கிலாந்தில் பொது நிகழ்ச்சிகளைக் கொண்டிருக்க மாட்டோம், ஏனெனில் சில சூழ்நிலைகளும் உள்ளன. ஆனால், ஏதோ ஒரு வகையில் அல்லது வேறு விதமாகவோ, நமது திட்டங்களை மாற்றும் சூழ்நிலை ஏற்படும் போதெல்லாம், அந்த மாற்றத்திற்குப் பின்னால் ஒரு நோக்கம் இருக்கிறது என்பதை நாம் உடனடியாக அறிந்து கொள்ள வேண்டும், அதை நாம் உடனடியாக திறந்த இதயத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் – தெய்வீகம் நாம் மாற வேண்டும் என்று விரும்புகிறது. நான் ஒரு சாலையில் செல்கிறேன் என்று வைத்துக் கொண்டால், மக்கள், ”நீங்கள் வழியை தவறவிட்டீர்கள் அன்னையே” என்று கூறுவார்கள். அது பரவாயில்லை. நான் ஒருபோதும் தொலைவதில்லை, ஏனென்றால் நான் என்னுடன் இருக்கிறேன்! ஆனால் நான் அந்த குறிப்பிட்ட சாலையில் செல்ல வேண்டியிருந்தது. அதுதான் விஷயம். நான் அதைச் செய்ய வேண்டியிருந்தது, அதனால்தான் நான் அந்த சாலையில் இருக்கவில்லை, நான் என் வழியை தவறவிட்டேன். அத்தகைய புரிதல் உங்களிடம் இருந்தால், உங்கள் இதயத்தில் அந்த திருப்தி இருந்தால், நீங்கள் நினைப்பதை விட வாழ்க்கை மிகவும் மதிப்பு வாய்ந்தது என்பதை நீங்கள் காண்பீர்கள். இந்த ஆண்டு கண்டிப்பாக பொது நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்தோம், மேலும் நம்மால் பொது நிகழ்ச்சிகளை நடத்த முடியவில்லை.இதன் காரணம் என்ன? என்று நான் யோசித்தேன். எனவே நாம் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே காரணம் ஆகும். உயிருள்ள மரமான ஒரு மரத்தின் வளர்ச்சியில், அது ஒரு குறிப்பிட்ட திசையில் ஒரு புள்ளி வரை நகர்கிறது, ஒரு மாற்றம் ஏற்படும் வரை. ஏனென்றால் அந்தப் பக்கம் சூரியன் வராமல் இருக்கலாம், ஒருவேளை நீர் நிலைகள் வராமல் இருக்கலாம், அதனால் அவை மாறத் தொடங்குகின்றன. அதே போல, நாம் இறைவனின் கைகளில் இருக்கிறோம் என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் சில திட்டங்கள் மாற்றப்பட்டால், அது நம்மீது மீண்டும் பிரதிபலிக்கிறது என்றால், ஏன் என்று நாம் பார்க்க வேண்டும். அது ஏன் என்பதை தெரிந்துகொள்ள நாம் ஒருங்கிணைக்க வேண்டும். சஹஜ யோகிகளின் ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானது. முதலில் உங்களை ஒருங்கிணைக்க, நீங்கள் தன்னாய்வு செய்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்களுக்குள் உள்ள ஒளியை பிரதிபலிக்கவும் மற்றும் நீங்களே உங்களை பார்த்துக்கொள்ளவும் நீங்கள் தன்னாய்வு செய்து கொள்ள வேண்டும்: சஹஜ யோகாவில் இதுவரை என்ன செய்துள்ளீர்கள்? நீங்கள் எங்கே இருந்தீர்கள், எவ்வளவு தூரம் சென்றிருக்கிறீர்கள் , மேலும் நீங்கள் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? Read More …

Advice for Effortless Meditation London (England)

வாழ்க்கையில் … அதுபோலவே நுண்ணதிர்வுகள் பாய்ந்து கதிர்வீச்சாகப் பரவுகின்றன. நீங்கள் செய்யவேண்டியது, அதன் தாக்கத்திற்கு உங்களை உட்படுத்த வேண்டும். எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பதே சிறந்தவழி. எங்கு உபாதையெனக் கவலைப்பட வேண்டாம். தியானத்தின் போது , பலரை நான் பார்த்திருக்கிறேன். எங்காவது உபாதையிருந்தால் அதிலேயே கவனம் செலுத்துகின்றனர் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை விட்டு விடுங்கள். அது தானாகவே சரிசெய்யப்படும். இது எளிதானது. ஆக நீங்கள் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. இதுதான் தியானமாகும். தியானம் என்பது கடவுளின் அருளுக்கு உங்களை உட்படுத்துவதாகும். அந்தக் கருணைக்கே உங்களை எப்படி குணப்படுத்துவது என்று தெரியும். உங்களை குணப்படுத்தி, உங்களுக்குள் எப்படி தன்னை தக்க வைத்துக் கொள்வது என்று தெரியும். உங்கள் ஆத்மாவைப் பிரகாசிக்கச் செய்யும். அதற்கு அனைத்தும் தெரியும். எனவே நீங்கள் என்ன செய்ய வேண்டும், அல்லது என்ன நாமம் கூற வேண்டும், என்ன மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என்று கவலைப்பட வேண்டியதில்லை. தியானத்தில் நீங்கள் முற்றிலும் முயற்சியின்றி இருக்க வேண்டும். நீங்கள் முழுமையாக உங்களை உட்படுத்த வேண்டும். அச்சமயம் நீங்கள் முற்றிலும் எண்ணங்களற்று இருக்க வேண்டும். ஒரு வேளை, உங்களால் எண்ணங்களற்று இருக்க இயலாத நிலையில் அந்த நேரத்தில் நீங்கள் உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள். ஆனால், அதில் ஈடுபாடு கொள்ள வேண்டாம். சூரியன் மெல்ல உதிக்கும்போது,இருள் நீங்கி சூரியக் கதிர்கள் ஒவ்வொரு மூளை முடுக்குகளில் சென்று அந்த இடத்தை முழுவதுமாக ஒளிபெற செய்வதைக் காண்கிறீர்கள். அது போன்று, உங்கள் தேகம் முற்றிலும் ஒளிபெறும். ஆனால் அச் சமயம் , முயற்சித்தாலோ அல்லது உங்களுக்குள் நடக்கும் ஒன்றை தடுக்க நினைத்தாலோ, அல்லது பந்தன் கொடுக்க முயற்சித்தாலோ அதற்குத் தெரியும். தியானத்திற்கு முயற்சியின்றி இருப்பதுதான் ஒரே வழி. ஆனால், நீங்கள் சோம்பலாக இருத்தல் கூடாது. நீங்கள் உன்னிப்பாக அதைக் கவனிக்க வேண்டும். மற்றொருபுறம், மனிதர்கள் உறங்கி விடுகின்றனர். அப்படியல்ல , நீங்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் உறங்கினால் ஒன்றும் நடக்காது. மறுபுறம் நீங்கள் சோம்பலுடன் இருந்தால் ஒன்றும் நடக்காது. நீங்கள் கவனமாக, ஏற்பதற்குத் தயாராக, முழு விழிப்புடன் இருக்க வேண்டும். முயற்சியே இல்லாது – முற்றிலும் முயற்சியில்லாது. நீங்கள் முற்றிலும் முயற்சியற்று இருந்தால் தியானம் சிறப்பாக அமையும். உங்கள் பிரச்சனைகளைப் பற்றியே சிந்திக்காதீர்கள். எந்த சக்கரம் குறையுடன் இருந்தாலும், எதுவாக இருந்தாலும், உங்களை அதற்கு உட்படுத்தினால் போதும். சூரியன் ஒளி பிரகாசிக்கும் போது, சூரியனுக்கு இயற்கை தன்னை Read More …

The Role of Tongue, Sight and Feet in Spiritual Evolution New Delhi (India)

ஒரு தாயாகவும் குருவாகவும் இருப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றி நான் சொல்லிக் கொண்டிருந்தேன். ஏனென்றால் இரண்டும் மிகவும் முரண்பாடான செயல்பாடுகள். உங்கள் இரட்சிப்பின் பொறுப்பாளராக இருக்க விரும்பும் ஒரு நபருக்கு, விசேஷமான , மோட் க்ஷ தாயினியாக [விடுதலை வழங்குபவர்], இருப்பது மிகவும் கடினம். பாதையானது மிகவும் மென்மையாகவும், ஏமாற்றும் விதமாகவும் இருப்பதால் நீங்கள் அனைவரும் தாங்களாகவே வந்து கடந்து செல்ல வேண்டும். நீங்கள் இந்த பக்கமாகவோ அல்லது அந்த பக்கமாகவோ விழுந்தால் உங்களுக்கு பேரழிவு ஏற்படும். உங்கள் ஏறுதலை நான் கவனித்து வருகிறேன் ஒரு தாயின் இதயபூர்வமான அன்புடனும் குருவின் வழிகாட்டுதலிலும் நீங்கள் மேலே வருவதை நான் காண்கிறேன். பின்னர் மக்கள் கீழே விழும் காட்சிகளைப் பார்க்கிறேன் . நான் அவர்களிடம், “மேலே வா” என்று சொல்ல முயற்சிக்கிறேன். சில நேரங்களில் நான் கத்துகிறேன், சில நேரங்களில் நான் அவர்களை இழுக்கிறேன், சில நேரங்களில் நான் அவர்களை நேசிக்கிறேன், அவர்களை அரவணைப்பேன். உனக்குள்ளேயே நீயே தீர்மானிக்க முடியும், நான் உன்னிடம் எவ்வளவு உழைத்தேன், உன்னை எவ்வளவு நேசித்தேன் என்று. ஆனால் நீங்கள் உங்களை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். ஒரு சஹஜ யோகியைப் பொறுத்தவரை, முழு விஷயத்தையும் சாட்சி பாவனையுடன் சக்தியால் தீர்மானிக்க வேண்டும் என்று நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். இப்போது சாட்சிபாவனை சக்தியானது அது பேசாமல் அமைதியாக இருக்கிறது . நீங்கள் மிகவும் பேசக்கூடிய நபராக இருந்தால், அது உங்களுக்கு அதிகம் உதவப்போவதில்லை. நீங்கள் சமநிலையில் இருக்க வேண்டும். இந்த அவதாரத்தில் முதன்முறையாக நான் பேசத் தொடங்கினேன், இந்த வகையான பேச எனக்குப் பழக்கமில்லை என்பதால் நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். எனவே, உங்களைப் பொறுத்தவரை, நீங்கள் அதிகம் பேசாமல் இருப்பது அவசியம், நீங்கள் பேச விரும்பும் வரை பேசாமல் இருப்பது அவசியம். மேலும் பேசும் மிகச் சில வாக்கியங்கள், தீர்க்கமானவையாக இருக்க வேண்டும் . நான் முன்பு சொன்னது போல, கவனச்சிதறல்களின் அனைத்து உறுப்புகளுக்கும் நாக்கு தான் தலைவன். உங்கள் நாக்கை நீங்கள் கட்டுப்படுத்த முடிந்தால், நீங்கள் மற்ற அனைத்திலும் தேர்ச்சி பெற்று விடுவீர்கள். ஏனென்றால் நாவுக்கினியவையாக இருக்கும். உதாரணமாக, நீங்கள் ஒரு பெண்ணைப் பார்க்கிறீர்கள்: ஆனால் அவளின் பேச்சு இனிமையாக இல்லையென்றால், அவள் அழகாக இருக்கலாம், ஆனால் நீங்கள் அவளைப் பார்க்க விரும்பவில்லை. அவள் ஒரு நபரைப் பற்றி, தீர்மானிக்கிறாள், அவளுடைய நாக்கு தீர்மானிக்கிறது. நீங்கள் சிறிது உணவை சாப்பிட Read More …